Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
மஞ்சளின் சாம்பலில் இத்தனை மருத்துவமா? அசராம படிங்க!
பலரும் அறியாத சில அற்புதமான பாட்டி வைத்தியங்கள்!
ஒருவேளை நம் வீட்டில் பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியங்கள் பின்பற்றி வந்திருந்தால், நமது ஊர்களில் தெருவுக்கு, தெருவுக்கு இத்தனை மருத்துவமனைகளும், கண், காது, மூக்கு என தனித்தனி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்ப்பிடல்களும் முளைத்திருக்காது.
சின்ன, சின்ன உடலநலக் கோளாறுகள், நோய்களுக்கு கூட, நம் வீட்டு சமையற்கட்டிலேயே மருந்துகள் இருப்பதை மறந்து... நாம் அவசர அவசரமாக மருத்துவமனைகளுக்கு ஓடுகிறோம்.

இனிமேல், இந்த கோளாறுகளுக்கு நீங்கள் ஆங்கில மருந்துகளை தேடி ஓட தேவையில்லை. இதோ! இந்த எளிதான பாட்டி மருத்துவ குறிப்புகளை பின்பற்றுங்கள்...
குடல் புண்!
மஞ்சள் சாம்பல் ஆகும் வரை நெருப்பில் எரிய வைத்து, மஞ்சள் சாம்பலை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடம் புண் ஆறும்.
உதட்டு வெடிப்பு!
எரித்து சாம்பல் ஆக்கிய கரும்பு சக்கையை எடுத்து, அதனுடன் வெண்ணெய் சேர்த்து தடவி வந்தால் உதட்டு வெடிப்பு சரியாகும்.
செரிமானம்!
கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஒரே அளவில் எடுத்து அதை கொதிக்கும் நீரில் கலந்து, ஆறவைத்த பிறகு அதை வடிக்கட்டி குடித்து வந்தால் செரிமான கோளாறுகள், அஜீரணம் போன்றவை குணமாகும்.
மலச்சிக்கல்!
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, காலை, மாலை இருவேளை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும், காலை கடன் சீராக கழியும்.
தீப்புண்!
வாழைத்தண்டினை நெருப்பில் இட்டு சாம்பலாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீப்புண் ஆறும். சீழ்வடிதல் நிற்கும்.
வறட்டு இருமல்!
தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும்.
தலை பாரம்!
தும்பை பூவை நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைபாரம் குறையும்.
வாயுத் தொல்லை!
உலர்ந்த வேப்பம் பூவை பொடியாக்கி, சுடுநீரில் கலந்து உட்கொண்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்குவதுடன், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications