Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மஞ்சளின் சாம்பலில் இத்தனை மருத்துவமா? அசராம படிங்க!
பலரும் அறியாத சில அற்புதமான பாட்டி வைத்தியங்கள்!
ஒருவேளை நம் வீட்டில் பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியங்கள் பின்பற்றி வந்திருந்தால், நமது ஊர்களில் தெருவுக்கு, தெருவுக்கு இத்தனை மருத்துவமனைகளும், கண், காது, மூக்கு என தனித்தனி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்ப்பிடல்களும் முளைத்திருக்காது.
சின்ன, சின்ன உடலநலக் கோளாறுகள், நோய்களுக்கு கூட, நம் வீட்டு சமையற்கட்டிலேயே மருந்துகள் இருப்பதை மறந்து... நாம் அவசர அவசரமாக மருத்துவமனைகளுக்கு ஓடுகிறோம்.

இனிமேல், இந்த கோளாறுகளுக்கு நீங்கள் ஆங்கில மருந்துகளை தேடி ஓட தேவையில்லை. இதோ! இந்த எளிதான பாட்டி மருத்துவ குறிப்புகளை பின்பற்றுங்கள்...
குடல் புண்!
மஞ்சள் சாம்பல் ஆகும் வரை நெருப்பில் எரிய வைத்து, மஞ்சள் சாம்பலை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடம் புண் ஆறும்.
உதட்டு வெடிப்பு!
எரித்து சாம்பல் ஆக்கிய கரும்பு சக்கையை எடுத்து, அதனுடன் வெண்ணெய் சேர்த்து தடவி வந்தால் உதட்டு வெடிப்பு சரியாகும்.
செரிமானம்!
கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஒரே அளவில் எடுத்து அதை கொதிக்கும் நீரில் கலந்து, ஆறவைத்த பிறகு அதை வடிக்கட்டி குடித்து வந்தால் செரிமான கோளாறுகள், அஜீரணம் போன்றவை குணமாகும்.
மலச்சிக்கல்!
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, காலை, மாலை இருவேளை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும், காலை கடன் சீராக கழியும்.
தீப்புண்!
வாழைத்தண்டினை நெருப்பில் இட்டு சாம்பலாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தீப்புண் ஆறும். சீழ்வடிதல் நிற்கும்.
வறட்டு இருமல்!
தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும்.
தலை பாரம்!
தும்பை பூவை நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைபாரம் குறையும்.
வாயுத் தொல்லை!
உலர்ந்த வேப்பம் பூவை பொடியாக்கி, சுடுநீரில் கலந்து உட்கொண்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்குவதுடன், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











