Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
இந்த 2 பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றும் எனத் தெரியுமா?
இங்கு எந்த 2 பொருட்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் புழுக்களை வெளியேற்றும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உடலில் இயற்கையாகவே கொழுப்புக்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த கொழுப்புக்கள் தான் ஆற்றலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது ஒருவரது உடலில் உணவுகள் மூலம் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போதே உடலின் இயக்கம் பாதிக்கப்படுவதோடு, ஆற்றலும் குறைய ஆரம்பிக்கும்.

ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் வயிற்றில் புழுக்களின் அளவு அதிகமாக இருந்தால், உணவுகளின் மீது ஆவல் அதிகரிக்கும். எப்போது ஒருவர் அதிகளவு இனிப்பு உணவுகளை உட்கொள்கிறாரோ, அவரது உடலில் சளியின் அளவு அதிகரித்து, புழுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும்.
இந்த சூழ்நிலையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளும் பெருக ஆரம்பிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களது உடலில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைத்து, புழுக்களின் பெருக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் அதற்கான ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
ஆளி விதை - 100 கிராம்
உலர்ந்த கிராம்பு - 10 கிராம்

செய்முறை:
முதலில் ஆளி விதை மற்றும் உலர்ந்த கிராம்பை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:
ஒரு டம்ளர் நீரில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து கலந்து தினமும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலை உணவின் போது ஒரு டம்ளர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு
இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த பானத்தைக் குடிப்பதோடு, 3 நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் 3 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் முதல் ஒரு மாதத்தில் உடல் சுத்தமாகவும், நச்சுக்களின்றியும், புழுக்களின்றியும் இருப்பதை உணரலாம்.

மனதில் கொள்ள வேண்டியவை:
எப்போதும் உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது, குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதோடு, ஜூஸ்களை அடிக்கடி பருக வேண்டும். அதோடு ஜங்க் உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications