Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க
பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாத 6 பிரச்சனைகள்: மகப்பேறு மருத்துவர்கள்!
மகப்பேறு மருத்துவர்கள் கூறும் பெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாத 6 மாதவிடாய் பிரச்சனைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
மாதவிடாய் என்பது மாதம்தோறும் வயதுக்கு வந்த பெண்கள் மத்தியில் உண்டாகும் சுழற்சி முறையிலான செயற்பாடு. இது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை குறிக்கும் செயல் என்றும் கூறலாம். மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதை வைத்தும், அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை அறிய முடியும்.

இதில், பெண்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாத ஆறு மாதவிடாய் கோளாறுகள் இவை....

தீவிரமான பிடிப்பு!
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தீவிர பிடிப்பு காரணமாக தாங்கமுடியாத வலி உண்டாகும். இதற்கு "endometriosis" எனப்படும் இடமகல் கருப்பை அகப்படலம் பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம். Endometriosis என்பது கருப்பையில் வளரும் செல்கள், கருப்பை வெளிப்புற சுவரில் வளர துவங்குவது ஆகும். இதனால் அதிக வலி உண்டாகும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான வலி உண்டாவது இதற்கான அறிகுறியாக இருக்கிறது.

இரத்தப்போக்கு!
மாதவிடாய் காலத்தில் முதல் இரண்டு நாட்கள் அதிக இரத்த போக்கு உண்டாகும். கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் போதிலும் கூட அதிக இரத்த போக்கு உண்டாகலாம். ஆனால், நீங்கள் இதுகுறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் அல்லது புற்றுநோய் செல் வளர்ச்சியின் ஆரம்பம் கூட அதிக இரத்தப்போக்கு ஏற்பட காரணியாக இருக்கலாம்.

பத்து நாட்கள்!
மாதவிடாய் நாட்கள் பத்து நாட்கள் வரை நீடிப்பதும், அல்லது அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படுவது கருப்பை நீர்க்கட்டி, கருப்பையில் பூச்சி / நச்சு அதிகரித்து வளர்தல் போன்ற மருத்துவ நிலையின் காரணமாக இருக்கலாம். இதனால் இரத்த சோகை ஏற்படும். எனவே, இது போன்ற நிலையில் நீங்கள் உடனே பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம்.

மாதவிலக்கு கோளாறுகள்!
சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் முன்னரே மனோநிலை சமநிலையின்மை உண்டாகும். அசாதாரணமான பசி, அதிகளவில் பதட்டம், மூட் ஸ்விங்ஸ், மன அழுத்தம், மனநிலை கட்டுப்பாடு இழத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன. இது ஓரிரு வாரங்களுக்கு கூட நீடிக்கலாம். இதனால் நீங்கள் அசௌகர்யத்திற்கு ஆளாவீர்கள்.

ஹார்மோன்!
சில மருத்துவ நிலைகள் மாதவிடாயை பாதிக்கும். ஆஸ்துமா இருந்தால் மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரத்திற்கு முன்னரே நீங்கள் மோசமாக உணர்வீர்கள்.நீரிழிவும், மன அழுத்தம், கீழ் வாதம், மூட்டு வீக்கம் போன்ற பல மருத்துவ நிலைகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். இதற்கு நீங்கள் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மாதவிடாய் தள்ளிபோவது!
கருத்தரிக்காமல் மாதவிடாய் தள்ளிப்போக தைராயிடு, ஹார்மோன் சமநிலையின்மை, டயட்டில் கோளாறு, அதிகளவிலான உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருக்கலாம். எனவே, இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications