Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
ஏன் நீங்கள் மழைக் காலத்தில் தினமும் குளிக்க தேவையில்லை என தெரியுமா?
மழைக் காலத்தில் தினமும் குளிக்க அவசியமில்லை என்பதற்கான காரணங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நாகரீகம், சுகாதாரம் என்ற பெயரில் தான் நாம் பலவற்றையும் செய்து வருகிறோம். ஆனால், அப்படி நாம் நமது அன்றாக வாழ்வில் கடைப்பிடிக்கும் சிலவன அவ்வளவு சீரியஸாக பின்பற்ற தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதில், முக்கியமானது மழைக் காலத்தில் தினமும் குளிக்க தேவையில்லை என இவர்கள் கூறுகின்றனர். அது ஏன்? எதற்காக? என இங்கு காணலாம்...

காரணம் #1
குளிர் / மழைக் காலத்தில் குளிப்பதில் இருந்து பலரும் நழுவ விரும்புவார்கள். இது நல்லது தான் என்கின்றனர் சரும மருத்துவ நிபுணர்கள்.
ஆம், மழைக் காலத்தில் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லையாம். உண்மையில் மழைக் காலத்தில் தினமும் குளிப்பது சருமத்திற்கு தீங்கானது என்கின்றனர்.

காரணம் #2
சரும நல நிபுணர்கள் மழைக் காலத்தில் நமது சருமத்தில் பெரிதாக அழுக்கு படியாது. பாக்டீரியா தாக்கம் இருக்காது. மேலும், சாதரணமாகவே நமது சருமம் தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கும்.
ஒருவேளை நீங்கள் ஜிம் செல்பவர், ளவுக்கு அதிகமாக வியர்க்கும் அளவிற்கு வேளைகளில் ஈடுபடுபவர் மழைக் காலத்தில் தினமும் குளிக்கலாம் என்கின்றனர்.

காரணம் #3
மழைக் காலத்தில் பலரும் சுடு தண்ணியில் குளிக்க தான் விரும்புவார்கள். மழைக் காலத்தில் தினமும் சுடு நீரில் குளிப்பது சருமத்தை வறட்சியடைய செய்யும். இது தீங்கானது என்கின்றனர்.
அல்லது நீண்ட நேரம் சுடு தண்ணியில் குளிப்பதை தவிர்த்துவிடுங்கள் என சரும நல நிபுணர்கள் விரும்புகின்றனர்.

காரணம் #4
நமது சருமத்தில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கும். இது சரும நலத்தை பாதுகாக்கும், ரசாயன நச்சுக்களை எதிர்த்து போராடும். இதற்காகவே மழைக் காலத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளித்தார் போதுமானது என சரும நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

காரணம் #5
மழைக் காலத்தில் தினமும் சுடு தண்ணியில் குளிப்பது நகங்களின் நலத்திற்கும் கேடு. இதனால் நகங்கள் வலுவிழந்து உடைந்து / விரிசல் அடைந்து போகும்.

காரணம் #6
பொதுவாகவே, தினமும் குளிப்பது அவசியமற்றது எனவும். உடலில் அழுக்கு சேர்வது பொருத்து குளிப்பது போதுமானது என்ற கருத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
