Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?
ஆன்மீக பொருளாக மட்டும் அல்லாமல், கற்பூரம் மூலம் நாம் பெரும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
கற்பூரம் என்பது ஆரத்தி எடுக்க, கடவுளை வணங்கும் போது மட்டும் பயன்படுத்தப்படும் ஆன்மீக பொருளாக மட்டும் தான் பார்த்து வருகிறோம். ஆனால் இதில் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.

அதற்கென கற்பூரத்தை சாப்பிட வேண்டுமா என கேட்க வேண்டாம். இது சாப்பிட உகந்ததல்ல. இதன் வாசனை சுவாசத்தின் மூலம் நன்மை அளிக்கவல்லது.
சிலருக்கு இது நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம். அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிறில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பயன்படுத்தலாம்.
இனி, இரவு முழுக்க இதயத்தில் கற்பூரம் வைத்து கட்டி உறங்குவதால் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்...

இரத்த ஓட்டம்!
இரத்த ஓட்டத்தை சீராக்க ஊக்கப்படுத்துகிறது கற்பூரம். மேலும், இது வாயுத்தொல்லை, வாயுவால் வயிறு வீக்கம் அடைவது போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

செரிமானம்!
கற்பூரத்தின் தன்மை செரிமானம் சீராகவும் கற்பூரம் உதவுகிறதாம்.

சளித்தொல்லை!
கற்பூரம் சளித்தொல்லை நீங்க வெகுவாக உதவுகிறது. சளி மட்டுமின்றி சுவாசக் கோளாறுகளுக்கும் நல்ல தீர்வளிக்க கூடியது கற்பூரம்.

நுரையீரல்!
இதன் வாசம் சுவாசிப்பது நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. இது பலரும் அறிந்த பாட்டி வைத்தியம் தான். மேலும், இது வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

கற்பூர எண்ணெய்!
கற்பூர எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால், தசை மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்.



Click it and Unblock the Notifications











