Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
குழந்தைகளுக்கு மருந்தாகும் வில்வப்பூக்கள்
சிவ ஆலயங்களில் தல விருட்சமாக வளர்க்கப்படும் வில்வமரம் தெய்வீக மரம் மட்டுமல்ல. மருத்துவ குணம் நிறைந்ததுமாகும். மரத்தின் அனைத்துப்பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. வில்வப்பூக்கள் குழந்தைகளின் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வில்வப்பூக்கள் சமையலில் உண்ணும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பூக்களைக் கொண்டு சாம்பார் வைக்கலாம். வடைமாவில் கலந்து வடை செய்யலாம். இதனால் குடலில் உள்ள வாயு நீங்கும். உடல் லேசாகும்.
வயிற்றுவலி நீங்கும்
வில்வப்பூவை பொடி செய்தும் பயன்படுத்தலாம் கசாயமாகவும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு வயிற்றில் மாந்தம், பேதி ஏற்பட்டால் வில்வப்பூவை உலர்த்தி தூளாக்கி கால் கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் கலக்கிக் கொடுக்க நிவாரணம் ஏற்படும்.
மலேரியா காய்ச்சல்
கடுமையான காய்ச்சல், மலேரியா காய்ச்சலுக்கு வில்வப்பூ சிறந்த மருந்து. வில்வப்பூ, துளசி,சமஅளவு, எடுத்து சாறு தயாரித்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். தினம் இருவேளை ஒரு வாரத்திற்கு சாப்பிட்டு வர கடுமையான காய்ச்சல் குணமடையும்.
உள்காய்ச்சல் குணமடையும்
வில்வப்பூ, வேப்பம்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்து நெய்யில் வதக்கி அம்மியில் நன்றாக அரைத்து தேன்கலந்து கொட்டைப் பாக்கு அளவு உருண்டையாகச் செய்து வேளைக்கு ஒரு உருண்டையாக காலை, மாலை சாப்பிட்டு வர மூன்று நாட்களில் உள் காய்ச்சல் குணமடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications