Just In
- 11 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 2 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சரிவிகித உணவால் இதயநோயை இதமாய் தடுக்கலாம்
மதுவும் புகையும்
மதுப்பழக்கம் இதயத்திற்கு எதிரியாகும். இது இதயத்தின் தசைகளை வலுவிலக்கச்செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் எற்படுகிறது. எனவே அதிக அளவு மதுவுக்கு அடிமையானவர்கள் படிப்படியாக குறைத்து பின்னர் அதனை முற்றிலும் விட்டு விடுவது இதயத்திற்கு நன்மை தரும்
புகைப்பழக்கம் கொண்டவர்களின் வாழ்க்கை 15 முதல் 25 ஆண்டுகள் வரை குறைந்து விடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே புகைப்பதை நிறுத்தினால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.
உணவும் உடற்பயிற்சியும்
சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். அது இதயத்திற்கு இதம் தருவதோடு உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக்கும்.
உணவில் உப்பை குறைக்கலாம்
வெள்ளை அரக்கன் எனப்படும் உப்பு இதயத்திற்கு எதிரியாகும். இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் பாதிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
தியானம்
அளவிற்கதிமாக புகையோ, மதுப்பழக்கமோ இதயத்திற்கு ஆபத்தானது. இது இதயநோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். குடும்பத்தினரும் ஒரு ஜாலி ட்ரிப் சென்று வரலாம்.
மருத்துவ பரிசோதனை
கெட்ட கொழுப்பானது ரத்த நாளங்களில் உட்புகுந்து இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கும். எனவே அதிகம் குண்டாகாமல், உடலில் கொழுப்பு சேரவிடாமல் பார்த்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.
35 வயதை தாண்டிவிட்டாலே அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். உடலில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை செக்அப் செய்து கொள்வது பாதுகாப்பானது.
மரபியல் ரீதியான நோய்கள் இருப்பவர்களுக்கு பரிசோதனைகள் அவசியம். பெற்றோருக்கு நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் இருக்கும் பட்சத்தில் நீங்களும் உங்களின் உடலை பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்புசத்து போன்றவற்றை பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளவும்.
சிரிப்பு மருந்து
கவலைகளை புறந்தள்ளிவிட்டு அதிகமாய் சிரியுங்கள். இது இதயத்திற்கு இதம் உண்டாக்கும். மனதை லேசாக வைத்துக்கொண்டால் இதயநோயாவது ஒன்றாவது.