Latest Updates
-
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா?
கொலஸ்ட்ராலை முற்றிலும் கரைக்க இந்த ஒரே ஒரு பொருள் போதும்.. அது என்ன தெரியுமா?
காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது. அது தற்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது என சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்..
மிக எளிதாக நிலவேம்பு கஷாயத்தை தயாரிக்க முடியும். நிலவேம்பு கஷாயப் பொடியில் வெறும் நிலவேம்பு மட்டும் இருப்பதில்லை. அதனுடன் வெட்டி வேர், கோரைக்கிழங்கு, கருப்பு மிளகு, இஞ்சி போன்ற பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. நிலவேம்பு என்பது ஒரு முக்கியமான மூலிகையாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த மூலிகையானது பழங்காலம் முதலே சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது. இது காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை 60 மி.லி நிலவேம்பு கஷாயத்தை குடிக்கலாம் என கூறப்படுகிறது.
1. நிலவேம்பு உடல் எடை குறைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறது. இதில் உள்ள மெத்தனால் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. எந்தவொரு நோயையும் குணப்படுத்த அல்லது தடுக்க, நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முக்கியம். நிலவேம்பில் துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
2. இது சருமத்தை பளபளப்பாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர இரத்த சோகையிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது.. அதிலும்
3. கல்லீரல் பிரச்சனைகளுக்கும் நிலவேம்பு பயனுள்ளதாக இருக்கிறது. கொழுப்பு கல்லீரல், கல்லீரல், ஈரல் அழற்சி மற்றும் கல்லீரல் தொடர்பான பல நோய்களை குணப்படுத்த நிலவேம்பு உதவுகிறது.
4. மலச்சிக்கலைப் போக்க நிலவேம்பு தண்ணீர் உதவுகிறது. மூட்டுவலிக்கும் நல்லது. அதேசமயம் வயிற்றையும் சுத்தப்படுத்துகிறது.
5. புற்றுநோயை எதிர்த்து போராடவும் கல்லீரலின் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது.
6. இரவில் நிலவேம்பை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது; மேலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. நிலவேம்பு இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதோடு தசை செல்களால் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. மொத்தத்தில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதில் நிலவேம்பு பெரும் பங்கு வகிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












