Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கொலஸ்ட்ராலை முற்றிலும் கரைக்க இந்த ஒரே ஒரு பொருள் போதும்.. அது என்ன தெரியுமா?
காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது. அது தற்போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது என சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்..
மிக எளிதாக நிலவேம்பு கஷாயத்தை தயாரிக்க முடியும். நிலவேம்பு கஷாயப் பொடியில் வெறும் நிலவேம்பு மட்டும் இருப்பதில்லை. அதனுடன் வெட்டி வேர், கோரைக்கிழங்கு, கருப்பு மிளகு, இஞ்சி போன்ற பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. நிலவேம்பு என்பது ஒரு முக்கியமான மூலிகையாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த மூலிகையானது பழங்காலம் முதலே சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது. இது காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை 60 மி.லி நிலவேம்பு கஷாயத்தை குடிக்கலாம் என கூறப்படுகிறது.
1. நிலவேம்பு உடல் எடை குறைப்பிற்கு நன்றாக வேலை செய்கிறது. இதில் உள்ள மெத்தனால் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. எந்தவொரு நோயையும் குணப்படுத்த அல்லது தடுக்க, நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முக்கியம். நிலவேம்பில் துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
2. இது சருமத்தை பளபளப்பாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர இரத்த சோகையிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது.. அதிலும்
3. கல்லீரல் பிரச்சனைகளுக்கும் நிலவேம்பு பயனுள்ளதாக இருக்கிறது. கொழுப்பு கல்லீரல், கல்லீரல், ஈரல் அழற்சி மற்றும் கல்லீரல் தொடர்பான பல நோய்களை குணப்படுத்த நிலவேம்பு உதவுகிறது.
4. மலச்சிக்கலைப் போக்க நிலவேம்பு தண்ணீர் உதவுகிறது. மூட்டுவலிக்கும் நல்லது. அதேசமயம் வயிற்றையும் சுத்தப்படுத்துகிறது.
5. புற்றுநோயை எதிர்த்து போராடவும் கல்லீரலின் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது.
6. இரவில் நிலவேம்பை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது; மேலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. நிலவேம்பு இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதோடு தசை செல்களால் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. மொத்தத்தில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதில் நிலவேம்பு பெரும் பங்கு வகிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
