Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கோடைகாலத்தில் உங்க உடலை உள்ளுக்குள்ளிருந்து குளிர்ச்சியாக வைச்சுக்கணுமா? இந்த மசாலா பொருட்களை சேர்த்துக்கோங்க!
பருவநிலை மாறும்போது அதற்கேற்றாற் போல உணவில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். தற்போது வெப்பமான காலநிலை நிலவுவதால், நம்மில் பலர் குளிர்ச்சியான தன்மை கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நமது முழு உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்ய நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம்மில் பலர், மசாலாப் பொருட்கள் நம் உடலில் வெப்பத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கலாம், எனவே கோடைகாலத்தில் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

மசாலாப் பொருட்களில் பல பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை வெளிப்புற வெப்பம் தாங்க முடியாததாக இருக்கும்போது உங்கள் உட்புற உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எனவே கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க நீங்கள்அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில பயனுள்ள மசாலாப் பொருட்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வெந்தயம்
இந்த விதைகள் அமிலத்தன்மை, குமட்டல் மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவும். அவற்றின் குளிர்ச்சியான பண்புகள் காரணமாக இந்தியாவில் பல வீட்டு வைத்தியங்களில் அவை பயன்படுத்தப்படுகின்றன. சமைப்பதைத் தவிர, பலர் காலையில் வெந்தய தண்ணீரை உட்கொள்வார்கள் அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, எழுந்தவுடன் அதை உடனடியாக சாப்பிடுவார்கள்.
கொத்தமல்லி
கொத்தமல்லி விதையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. அவை உடலில் இருந்து கெட்ட நச்சுகளை வெளியேற்ற உதவுவதோடு செரிமான பிரச்சனைகளையும் போக்குகிறது. கொத்தமல்லி அதன் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளால் கோடையில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
புதினா
புதினா உங்கள் கோடைகால உணவில் சேர்க்க வேண்டிய மிகச்சிறந்த பொருட்களில் ஒன்றாகும். அவற்றில் குறிப்பிட்ட அளவு மெந்தோல் உள்ளது, இது குளிர்ச்சியை அளிக்கிறது மற்றும் அஜீரணத்திற்கு எதிராக போராட உதவுகிறது. புதினா உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் கோடைகாலத்தில் சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
சீரகம்
சீரகம் என்பது பல இந்திய உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் ஒரு பிரபலமான மூலப்பொருளாகும். கோடை காலத்தில் பல புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. சீரகத்தில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
ஏலக்காய்
உடல் சூட்டை குறைக்கும் இயற்கை மசாலாப் பொருட்களில் ஒன்று ஏலக்காய். இந்த சமையலறை மூலப்பொருளில் இருக்கும் கலவைகள் உடலின் உள் வெப்பநிலையைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். ஏலக்காயில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












