Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
'இந்த' நேரத்துல நீங்க மீன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா உங்க உடலுக்கு என்ன ஆபத்து ஏற்படும் தெரியுமா?
மீனை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? மழைக்காலத்தில் கடல் உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மழைக்காலத்தில் கடல் உணவுகளை உண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால், மழைக்காலத்தில் மீன் அல்லது மற்ற கடல் உணவுகளை உட்கொள்வது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், பருவமழை நிவாரணம் மற்றும் புத்துணர்ச்சியைக் கொண்டுவரும் அதே வேளையில், நீர்நிலைகளில் மாசுபடுவதற்கான அதிக அபாயம் இருப்பதால், கடல் உணவுகள் அபாயகரமான கிருமிகளுக்கு எளிதில் ஆளாகின்றன.

இதனால் மழைக்காலத்தில் கடல் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மழைக்காலத்தில் கடல் உணவுகளை உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பக்க விளைவுகள்
கடல் உணவுகள் மிகவும் சத்தானது, புரதம் நிரம்பியது மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. அவை உங்கள் ஆரோக்கியத்தை, குறிப்பாக உங்கள் மூளை, கண்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க முடியும். இருப்பினும், மழைக்காலத்தில் இதை உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
நீர் மாசுபாடு
மழைநீர் நிலத்தில் இருந்து ஆறுகள், ஏரிகளுக்கு சென்று இறுதியில் கடலில் கலக்கிறது. எல்லா அசுத்தங்களோடு மழைநீர் கடலில் சேர்வதால், பருவமழை அடிக்கடி நீர் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். மீன் மற்றும் பிற கடல் உணவு இனங்கள் இந்த மாசுபடுத்திகளை உட்கொள்ளலாம். அவை அவற்றின் உடலில் சேரலாம்.
மனிதர்கள் அசுத்தமான கடல் உணவை உட்கொள்ளும்போது, உலோக தன்மை கொண்ட பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு அவை வெளிப்படும். இது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பாதரச விஷம்
கடல் உணவு உண்பதால் ஏற்படும் மற்றொரு சாத்தியமான பக்க விளைவு பாதரச விஷம். பாதரசம் என்பது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோக சேர்மங்கள். இது மீன் மற்றும் பிற கடல் உணவுகளின் திசுக்களில் காணப்படும், குறிப்பாக சூரை மீன், வாள்மீன் மற்றும் சுறா போன்ற பெரிய மீன்களில் குவிந்துவிடும். பருவமழை இந்த பாதரச அளவுகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் உட்கொள்ளும் மீன் வகைகள் மற்றும் அளவுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மனிதர்கள் அசுத்தமான மீன்களை உட்கொள்ளும்போது, காலப்போக்கில் அவர்களின் உடலில் பாதரசத்தின் அபாயகரமான அளவைக் குவிக்கலாம். நடுக்கம், மனநிலை மாற்றங்கள், நினைவாற்றல் இழப்பு மற்றும் தசை பலவீனம் ஆகியவை பாதரச விஷத்தின் சில அறிகுறிகளாகும்.
உண்மையில், அதிக பாதரசம் உட்கொள்வது நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சுற்றுச்சூழல் மாசுபாடுகள்
பாதரசத்துடன் கூடுதலாக, கடல் உணவுகள் மற்ற சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளான பாலிகுளோரினேட்டட் பைபினைல்ஸ் (பிசிபி) போன்றவற்றால் மாசுபடுத்தப்படலாம். அவை மீன் திசுக்களில் குவிந்து, மனிதர்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம்.
கடல் உணவுகளுக்கு ஒவ்வாமை
சில நபர்களுக்கு சில வகையான மீன் அல்லது கடல் உணவுகளுக்கு ஒவ்வாமை அல்லது உணர்திறன் இருக்கலாம். மழைக்காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக பாதிக்கப்படும் போது, இந்த ஒவ்வாமைகள் அதிகரிக்கலாம். கடல் உணவு ஒவ்வாமையின் பொதுவான அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.
படை நோய், அரிப்பு, சொறி, முகம், உதடுகள், நாக்கு அல்லது தொண்டையில் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல், வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி ஆகியவை அடங்கும். உங்களுக்கு தெரிந்த ஒவ்வாமை இருந்தால், ஒவ்வாமையைத் தவிர்ப்பது மற்றும் ஏதேனும் பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம்.
ஒட்டுண்ணி தொற்றுகள்
பருவமழை நீர்நிலைகளில் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் நாடாப்புழுக்கள், வட்டப்புழுக்கள் மற்றும் ஃப்ளூக்ஸ் போன்ற ஒட்டுண்ணிகள் இருக்கலாம், அவை உட்கொள்ளும்போது ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இந்த நோய்த்தொற்றுகள் செரிமான அமைப்பை பாதிக்கலாம்.
இதனால் பாதிக்கப்பட்ட கடல் உணவை சாப்பிட்ட பிறகு வயிற்றுப்போக்கு, வீக்கம் அல்லது வாயு ஏற்படலாம், மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில், மற்ற உறுப்புகளையும் கூட பாதிக்கலாம். மீன் மற்றும் கடல் உணவுகளை நன்கு சமைப்பது போன்ற முறையான சமையல் முறைகள், ஒட்டுண்ணிகளை அகற்றவும், தொற்று அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
மழைக்காலத்தில் கடல் உணவுகளை உண்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர, சூரை, கானாங்கெளுத்தி உள்ளிட்ட சில வகையான மீன்களில் அதிகளவு ஹிஸ்டமைன் உள்ளது. இது சிலருக்கு ஒவ்வாமை போன்ற எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஹிஸ்டமைன் நச்சுத்தன்மையின் அறிகுறிகளில் சிவத்தல், வியர்த்தல், தலைவலி அல்லது படபடப்பு ஆகியவை அடங்கும்.
மழைக்காலத்தில் கடல் உணவுகளின் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?
மழைக்காலத்தில் கடல் உணவின் இந்த பக்கவிளைவுகளின் அபாயத்தைக் குறைக்க, நம்பகமான மூலங்களிலிருந்து உயர்தர, புதிய கடல் உணவைத் தேர்ந்தெடுத்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகளைக் கொல்ல அதை நன்கு சமைக்க வேண்டும்.
உங்கள் கடல் உணவின் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு கவலைகள் இருந்தால் அல்லது அதை சாப்பிட்ட பிறகு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளை அனுபவித்தால், வழிகாட்டுதலுக்காக ஒரு சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
