Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
சர்வாங்காசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்ன? யாரெல்லாம் இதை செய்யக்கூடாது?
Sarvangasana Benefits In Tamil: யோகாசனங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும அற்புதமான ஒருவித உடற்பயிற்சியாகும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பலவிதமான யோகாசனங்கள் உள்ளன. நாம் தினமும் ஒரு யோகாசனம் குறித்து பார்த்து வருகிறோம். இன்று நாம் காணவிருப்பது சர்வாங்காசனம் குறித்து தான்.
சர்வாங்காசனத்தை முதன்முதலாக செய்யும் போது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், மிகவும் சுலபமாக இருக்கும். இந்த ஆசனமானது உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உங்களுக்கு சர்வாங்காசனம் எப்படி செய்வது, அதன் நன்மைகள் என்ன, யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பன போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.

சர்வாங்காசனம் செய்முறை
* முதலில் தரையில் மல்லாந்து படித்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கால்கள் இரண்டையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும்.
* பின்பு முதுகையும், பிட்டத்தையும் உயர்த்தி, கால்களை தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
* பிறகு இரண்டு முழங்கைகளையும் தரையில் ஊன்றி, உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து,கால்கள் மற்றும் உடல் ஒரே நேராக இருக்கும் படி செய்ய வேண்டும்.
* இந்நிலையில் கண்கள் கால் பெருவிரலைப் பார்க்க வேண்டும்.
* இந்த நிலையில் 2 நிமிடம் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
சர்வாங்காசனம் நன்மைகள்
சர்வாங்காசனத்தை தினமும் செய்து வந்தால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும். அவை:
* இந்த ஆசனம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தி புத்துயிர் அளிக்கும்.
* இந்த ஆசனமானது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
* நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.
* அட்ரீனல் சுரப்பிகள், கருப்பைகள் மற்றும் விதைப்பைகளை வலுவாக்கும்.
* 2 மற்றும் 3 ஆம் நிலை ஆஸ்துமாவிற்கு நன்மை அளிக்கும்.
* அடிவயிற்று தசைகள் வலுவாகும்.
* இதயத்திற்கு நல்லது.
* தலைவலி, உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு நன்மையளிக்கும்.
* தூக்க பிரச்சனைகளை சரிசெய்யும்.
* மலச்சிக்கல் பிரச்சனைப் போக்கும்.
யாரெல்லாம் சர்வாங்காசனம் செய்யக்கூடாது?
சர்வாங்காசனம் செய்யும் போது ஒருசில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக யாரெல்லாம் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் சர்வாங்காசனம் செய்யக்கூடாது.
* மாதவிடாய் காலத்தில் சர்வாங்காசனத்தை செய்யக்கூடாது.
* தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சர்வாங்காசனத்தை செய்யக்கூடாது.
* கடுமையான தைராய்டு பிரச்சனை, நாள்பட்ட கழுத்து பிரச்சனைகள், தோள்பட்டை காயங்கள் மற்றும் ரெட்டினா பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சர்வாங்காசனத்தை செய்யக்கூடாது.
* இதய பிரச்சனைகள், காது பிரச்சனைகள், ஸ்லிப் டிஸ்க், ஸ்பான்டிலிடிஸ் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சர்வாங்காசனத்தை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











