தெரியாம கூட இஞ்சியை அதிகமா சாப்பிட்டுறாதிங்க... இது உங்க உடலில் என்னென்ன ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

குளிர்காலத்தில் நாம் அனைவரும் சூடான பானங்களையே அதிகம் குடிக்க விரும்புவோம். பருவகால மாற்றம் சில விரும்பத்தகாத ஒவ்வாமை மற்றும் நோய்களைக் கொண்டு வரும்போது, ஒரு சூடான கப் இஞ்சி டீ, காதா அல்லது இஞ்சி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட பானங்களை குடிக்க மக்கள் விரும்பலாம்.

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை பண்டைய காலம் முதல் இன்று வரை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் உங்கள் இதயத்திற்கு அதிசயங்களை செய்வது வரை இஞ்சி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

Risks of Eating Too Much Ginger In Tamil

மேலும், இது நெரிசலைத் தணிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் இந்த குளிர்காலத்தில் கட்டாயம் தேவைப்படும். இந்த நேரத்தில் தேநீர், இஞ்சி டீ மற்றும் மசாலா பானங்களை அதிகம் குடிக்கும் அதேவேளையில், சமையலிலும் இஞ்சியை பயன்படுத்துகிறார்கள்.

பருவகால மாற்றங்களின் விளைவுகளைத் தணிக்க நீங்கள் இஞ்சியை அதிகமாக உட்கொள்கிறீர்களா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், நீங்கள் இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன பாதிப்புகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

இஞ்சி பாதுகாப்பானதா?

இஞ்சி இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஜிஞ்சரால் போன்ற செயலில் உள்ள சேர்மங்களால் ஏற்றப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, தினமும் இஞ்சியை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

இஞ்சியை மிதமான அளவில் உட்கொள்ளும் போது, அது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எந்தவொரு பொருளையும் மிதமான அளவு உட்கொள்ளும்போது, அது ஆரோக்கியமானதாக இருக்கும். அதிகப்படியான உட்கொள்ளல் சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். இஞ்சியை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

நெஞ்செரிச்சல்

உணவுக்குப் பிறகு சிறிதளவு இஞ்சியை உட்கொள்வது வாயுவைக் குறைக்க உதவும். ஆனால் அதை அதிகமாக உட்கொள்ளும்போது, வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும். இது நெஞ்செரிச்சல், வாயு, மலச்சிக்கல் மற்றும் அசௌகரியம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

இரத்த உறைதலை பாதிக்கலாம்

இஞ்சியில் இரத்தத்தை மெலிக்கும் தன்மை உள்ளது. அதனால், இதை அதிகமாக உட்கொள்வது இரத்த உறைதலை பாதிக்கலாம். மேலும், இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நபர்களை பாதிக்கலாம். எனவே, உணவில் இஞ்சியைச் சேர்ப்பதற்கு முன் அல்லது முற்றிலும் தவிர்ப்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும்

உணவில் அதிகப்படியான இஞ்சியைச் சேர்ப்பது இன்சுலின் அளவைத் தடுக்கலாம். இதனால், சர்க்கரை அளவு திடீரென குறைவதற்கு வழிவகுக்கும். எனவே, இஞ்சியின் உட்கொள்ளல் மிதமானதாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்.

வாய் எரிச்சல்

புதிய இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு வாயில் எரிச்சல் அல்லது எரியும் உணர்வை ஏற்படுத்தலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, November 19, 2023, 21:05 [IST]
Desktop Bottom Promotion