Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
இந்த நோய் உள்ளவர்களுக்கு பயம்னா என்னனே தெரியாம போயிருமாம்... இந்த அதிசய நோயின் அறிகுறி என்ன தெரியுமா?
பயம் என்பது அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு குணமாகும். வெளியில் எவ்வளவுதான் தைரியமாக நடித்தாலும் அனைவருக்குள்ளும் நிச்சயம் ஏதாவது ஒரு விசயத்துக்கோ அல்லது பல விஷயங்களுக்கோ பயம் இருக்கும். அதனால்தான் பயம் என்பது நம் வாழ்வின் இயல்பான மற்றும் இன்றியமையாத பகுதியாக உள்ளது.
பயம் பொதுவாக எதிர்மறையான குணமாக கருதப்பட்டாலும் அது பெரும்பாலும் நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நம்மை விழிப்புடன் வைத்திருக்கிறது, ஆனால் சில திரைப்படங்களில் வரும் ஹீரோக்கள் போல பயம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவர் இருந்தால் அவர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இது கேட்பதற்கு கற்பனையாக இருக்கலாம், ஆனால் பயம் என்றால் தெரியாமல் இருப்பது உண்மையில் ஒரு அரிய நோயாகும். அந்த நோயின் பெயரென்ன மற்றும் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரிட்டனைச் சேர்ந்த ஜோர்டி செர்னிக்
பிரிட்டனைச் சேர்ந்த ஜோர்டி செர்னிக் 2005 ஆம் ஆண்டு குஷிங்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் ஏற்பட்டால் உடலில் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் அவரது அட்ரீனல் சுரப்பிகளை அகற்றினர். சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது, ஆனால் இதற்கு பிறகு, ஜோர்டியின் பய உணர்வு முற்றிலும் மறைந்துவிட்டது. 2012 ஆம் ஆண்டு, அவர் டிஸ்னிலேண்டில் ஒரு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்து, விமானத்தில் இருந்து குதித்து, ஒரு கயிற்றைப் பயன்படுத்தி மிகப்பெரிய உயரத்திலிருந்து கீழே இறங்கினார். ஆனால் எந்த தருணத்திலும் அவர் பயத்தையும் உணரவில்லை. அவரது இதயத்துடிப்பு சாதாரண வேகத்தில் இருந்தது, மேலும் பதட்டம் துளியும் இல்லாமல் இருந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்.எம்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எஸ்.எம்., லிபாய்டு புரோட்டினோசிஸ் என்றும் அழைக்கப்படும் அர்பாக்-வைத்தே என்ற அரிய மரபணு கோளாறால் அவதிப்படுகிறார். இந்த நோய் மூளையின் ஒரு பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும். அமிக்டாலா என்பது பய உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதியாகும். விஞ்ஞானிகள் அந்த பெண் மீது ஏராளமான பரிசோதனைகளை நடத்தினர். அவர்கள் அந்த பெண்ணுக்கு பயங்கரமான திகில் படங்களைக் காட்டினர், பேய் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர், பாம்புகள் மற்றும் சிலந்திகளை வைத்து பயமுறுத்தினர், ஆனால் அவர் எதற்கும் பயப்படவில்லை. மாறாக, இந்த ஆபத்தான விஷயங்களை அவர் ரசிக்கத் தொடங்கினார்.
பயம் இல்லாமல் இருப்பது உண்மையில் நல்லதல்ல
எஸ்.எம்-ன் நடத்தை தனித்துவமானது. அவர் மக்களிடம் மிக நெருக்கமாக பழகுகிறார், முன்பின் தெரியாதவர்களிடம் கூட நெருக்கமாக பழகுகிறார்கள். ஒரு பரிசோதனையில், ஒருவருடன் எவ்வளவு தூரத்தில் இருந்து சௌகரியமாக உணர்ந்தாள் என்று கேட்டபோது, அவள் 0.34 மீட்டர் (சுமார் ஒரு அடி) மட்டுமே சொன்னார், இது சாதாரண மக்களை விட மிகவும் குறைவு. பய உணர்வு நமது சமூக நடத்தையையும் கட்டுப்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது.
எஸ்.எம். பலமுறை கத்தியைக் காட்டி அல்லது துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளார், ஆனால் அவர் ஒருபோதும் அச்சுறுத்தப்படுவதாக உணரவில்லை. இதன் காரணமாக அவர் பலமுறை கடினமான சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அர்பாச்-வைத்தே
பயமின்மை இது அர்பாச்-வைத்தே எனப்படும் மிகவும் அரிதான நோயின் விளைவாகும். இதுவரை சுமார் 400 பேருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பது பதிவாகியுள்ளது. இதன் முக்கிய அறிகுறிகள் கரகரப்பான குரல் மற்றும் கண்களைச் சுற்றி சிறிய புடைப்புகள், அத்துடன் மூளையில் கால்சியம் படிவுகள் ஆகியவை அடங்கும். அமிக்டாலா கட்டமைப்புகளில் படிவுகள் உருவாகும்போது, பயத்தின் எதிர்வினை அடங்கிவிடுகிறது. இந்த குறைபாடுதான் எஸ்.எம்-க்கு ஏற்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
