Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
மறந்தும் இந்த பழங்களை சாப்பிட்டதும் தண்ணி குடிச்சுராதீங்க.. இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
கோடைக்காலத்தில் தண்ணீரை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் எப்போதுமே உணவுகளை உண்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கூறுவார். ஏனெனில் அப்படி தண்ணீர் குடிக்கும் போது, செரிமான அமிலத்தின் திறன் குறைந்து, உணவை ஜீரணிப்பதில் சிரமம் ஏற்பட்டு, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் பழங்களை உட்கொண்டதும் சிலர் தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் பழங்களை உண்ட உடனேயே தண்ணீர் குடிக்கக்கூடாது.
பொதுவாக தண்ணீர் உள்ளுறுப்புக்களை நீரேற்றத்துடனும், உடல் வெப்பத்தை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் நீர் தான் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மறுபுறம், பழங்களை அதிகம் உட்கொள்வதன் மூலம், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் தடுக்கப்படும். இப்படிப்பட்ட பழங்களை உட்கொண்டதும் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமற்ற பழக்கம்.

ஏனெனில் பழங்களை உட்கொண்டதும் நீரை குடிக்கும் போது, அதன் விளைவாக உடலில் பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உண்மையில் சொல்லப்போனால் பழங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்துக்களை கொண்டவை என்பதால், அவற்றை உட்கொண்டதும் தாகம் எடுக்க வாய்ப்பே இல்லை. முக்கியமாக ஒருசில பழங்களை உட்கொண்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இப்போது அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, பலர் அந்த கொய்யாவை உப்பு மற்றும் மிளகாய் தூளை தொட்டு சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடும் போது, அது தாகத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் கொய்யாப்பழம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.
வாழைப்பழம்
அடுத்தது, வாழைப்பழம். எப்போதும் வாழைப்பழத்தை உட்கொண்டதும் தண்ணீரைக் குடிக்கக்கூடாது. இல்லையென்றால், அது செரிமான பிரச்சனைகளை அதிகரித்து, மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாக்கும்.
பேரிக்காய்
பேரிக்காய் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழம். இந்த பேரிக்காயை உண்டதும் தண்ணீரைக் குடிக்கக்கூடாது என்று நிபுணர்களே கூறுவதுண்டு. ஏனெனில் பேரிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, அது இருமல், சளியுடன், அஜீரண கோளாறையும் ஏற்படுத்தும்.
ஆப்பிள்
பெரும்பாலானோர் தினமும் சாப்பிடும் ஒரு பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை உண்டதும் தண்ணீரை ஒருபோதும் அருந்தக்கூடாது. இல்லாவிட்டால், அது வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரண கோளாறு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மாதுளை
மாதுளையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த மாதுளையை உட்கொண்டதும் தண்ணீர் குடிக்கவே கூடாது. இல்லாவிட்டால், அது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, சளி, இருமல் மற்றும் குமட்டல் உணர்வை ஏற்படுத்தும்.
தர்பூசணி
கோடையில் கிடைக்கும் தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. இந்த பழத் உட்கொண்டதும் தண்ணீரைக் குடித்தால், அது செரிமான செயல்முறையை மெதுவாக்கி, அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.
பப்பாளி
அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால், இது செரிமான மண்டலத்தை நன்கு செயல்பட உதவி புரியும். ஆனால் இந்த பப்பாளியை உண்டதும் நீரைக் குடித்தால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். எனவே கவனமாக இருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











