Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாழைப்பழத்தோலை வெச்சு எப்படி நம்ம உடம்புல இருக்கற மருவை வலிக்காம நீக்கலாம்?
நம்முடைய உடலில் உள்ள மருக்களை எளிமையாக சிம்பிள் டெக்னிக் மூலம் எப்படி நீக்க முடியும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய மிக விளக்கமான தொகுப்பு தான் இது.
சிலருக்கு மருக்கள் உடல் முழுவதும் காணப்படும் வாய்ப்பு உள்ளது . பார்ப்பதற்கு மச்சம் போன்று தென்பட்டாலும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் இது முகத்தில் தென்படும் போது சிலர் அதை அசிங்கமாக நினைக்கின்றனர். சில நேரங்களில் இது பெரிதாகி புண்ணாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
சிலர் இதை அகற்ற க்ரையோஜெனிக் போன்ற சிகிச்சைகளை, பியூட்டி நிலையங்களை நாடத் தான் செய்கின்றனர். ஆனால் அப்படி நாம் கஷ்டப்பட வேண்டிய கட்டாயம் இல்லை. இதை வெகுவாக சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டே பருக்களை நீக்கி விடலாம்.
மருக்கள் என்றால் என்ன?
இது தோலில் ஏற்படும் ஒரு சிறிய நீடித்த வளர்ச்சி. இது பாபிலமோ என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது வலி இல்லாதது ஆனால் பார்ப்பதற்கு தான் அசிங்கமாக தோன்றும். இந்த மருக்கள் நமது உடலில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவக் கூடியது. ஏன் ஒருவரிடம் இருந்து கூட மற்றவருக்கு பரவ ஆரம்பித்து விடும். சில பேருக்கு இது சில வருடங்களில், மாதங்களில் உதிர்ந்து விடும். சில பேருக்கு போகாமல் அப்படியே இருக்கவும் வாய்ப்புள்ளது.
மருக்கள் வரும் இடங்கள்
இந்த மருக்கள் பொதுவாக கை மற்றும் விரல்களில் ஏற்படுகிறது. சில சமயங்களில் கண்கள், முகம், உதட்டை சுற்றிய பகுதிகள், அந்தரங்க பகுதிகளில் கூட ஏற்படும்.
அகற்றுவது எப்படி?
இந்த மருக்களை க்ரையோஜெனிக் அல்லது அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம். 1-2 செட்டிங்கிலயே மருத்துவர் இதை நீக்கி விடுவார். ஆனால் இந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்யாமலேயே மருக்களை நீக்க சில வீட்டு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
டீ ட்ரி ஆயில்
இந்த டீ ட்ரி ஆயிலில் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி வைரல் பொருட்கள் உள்ளன. இது மருக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. இது மருக்களின் வளர்ச்சியை தடுத்து இதன் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பொருளான டெர்பினேன்-4 என்ற பொருள் அதற்கு காரணமான ஹெச்பிவி வைரஸை அழிக்கிறது. இதனால் மருக்கள் காய்ந்து அந்த இடத்தில் இருந்து உதிர்ந்து விடுகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய காட்டன் பஞ்சை எடுத்து அதில் டீ ட்ரி ஆயிலை நனைத்து மருக்களில் தடவவும். பிறகு அதன் மேல் 8 பணி நேரத்திற்கு பேண்டேஜ் போட்டு கொள்ளுங்கள். பிறகு அதை ரிமூவ் செய்து விட்டு தண்ணீரில் கழுவி விடவும். இதை மறுபடி மறுபடி செய்து வந்தால் சீக்கிரமே மரு உதிர்ந்து விடும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மருக்களுக்கு சிறந்த தீர்வளிக்க கூடியது. இதில் கொழுப்பு அமிலங்களும், ஆன்டி மைக்ரோபியல் தன்மையும் உள்ளது. இது மருக்களின் வளர்ச்சியை தடுப்பதோடு மற்ற இடங்களில் பரவுவதையும் தடுக்கிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தை புதுப்பிக்கவும் சருமத்தை மென்பையாக்கவும் செய்கிறது.
பயன்படுத்தும் முறை
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை மருக்களின் மீது தடவி விடுங்கள். 2 நிமிடங்கள் தடவி விட்டு விடுங்கள். இந்த முறையை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை என செய்து வாருங்கள். ஒரே வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
லெமன் கிராஸ் எஸன்ஷியல் ஆயில்
இந்த ஆயிலை நீங்கள் கொஞ்சமாக உபயோகித்தால் கூட போதும். இது டைப் 1 வைரஸ் போன்றவற்றை சரி செய்து சரும புண்களை குணப்படுத்துகிறது. சுருக்கென்ற வலி இல்லாமல் நீக்க இது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை
சில துளிகள் இந்த எண்ணெய்யை மருக்களின் மீது தடவி உலர விடுங்கள். இதை தினமும் இரண்டு தடவை செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
MOST READ:தினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது
பேக்கிங் சோடா
நீண்ட நாட்களான மருக்களை நீக்க பேக்கிங் சோடா உதவுகிறது. இதில் ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. இது மருக்களை அழிக்க பயன்படுகிறது. கால்களில் அந்தரங்க பகுதிகளில் இருக்கும் மருக்களை அழிக்க பெரிதும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா உடன் தண்ணீர் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளே செய்யுங்கள். கால்களில் இருந்தால் கால்களை இந்த தண்ணீரில் வைத்து சில நேரம் செய்து வாருங்கள். அப்படியே உலர விடுங்கள். சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அலச வேண்டாம். இதை திரும்ப திரும்ப செய்யும் போது மருக்கள் இறந்து விடும்.
கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெய் மருக்களின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள ஆன்டி வைரல் பொருளான யூ ஜெனின் வைரஸை அழித்து விடுகிறது. கிராம்பு எண்ணெய் மருக்களை உதிரச் செய்து விடும்.
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சில் கிராம்பு எண்ணெய்யை நனைத்து மருக்களின் மீது வைத்து பேண்டேஜ் போட்டு கட்டுங்கள். அப்படியே 6-8 மணி நேரம் வைத்து வாருங்கள். மரு காய்ந்து உதிர்ந்து விடும். பிறகு சுத்தமான நீரில் கழுவி விட்டு திரும்பவும் அதை செய்யவும்.
ஆப்பிள் சிடார் வினிகர்
மருக்களை அழிக்க ஆப்பிள் சிடார் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. ஆப்பிள் சிடார் வினிகர் இயற்கையிலேயே மருக்களின் செல்களை அழிக்க வல்லது. இதன் அசிட்டிக் தன்மை மருக்களை உருவாக்கும் வைரஸை அழிக்கிறது. அப்படியே மெது மெதுவாக மருக்கள் மறைந்து விடும்.
பயன்படுத்தும் முறை
ஆப்பிள் சிடார் வினிகரை மருக்களின் மீது வைத்து பேண்டேஜ் போட்டு கொள்ளுங்கள். இந்த முறையை திரும்ப திரும்ப செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு ஒரு அசிட்டிக். இது மருக்களை காயச் செய்து ஹெச்பிவி வைரஸை அழிக்கிறது. 2 வாரத்தில் ஏற்படும் நன்மையை கண்கூடாக பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறை
உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி மருக்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். இது 2 வாரத்திலேயே மருக்களை சரியாக்கி விடும்.
வாழைப்பழத் தோல்
மருக்களை வலி இல்லாமல் அகற்ற வாழைப்பழம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள என்சைம்கள் மருக்களை சரி செய்து விடுவதோடு அதன் ஆன்டி மைக்ரோபியல் தன்மை மருக்களை உதிரச் செய்து விடும்.
பயன்படுத்தும் முறை
ஒரு வாழைப்பழத்தை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை மருக்களில் தடவி விடுங்கள். அதன் மீது பேண்டேஜ் போட்டு கொள்ளுங்கள். 2 மணி நேரம் வைத்திருந்து தினமும் 2 முறை என செய்து வாருங்கள்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் ஆன்டி வைரல் தன்மை கொண்டது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சரும அழற்சியை குறைத்து மருக்களை போக்குகிறது. இது ஒரு வலியில்லாத முறை என்றே கூறலாம்.
பயன்படுத்தும் முறை
சில துளிகள் விளக்கெண்ணெய்யை எடுத்து அதை மருக்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். 2 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதை கழுவ வேண்டாம் அப்படியே விட்டு விடுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என செய்து வந்தால் சில மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
பூண்டு
பூண்டு பாராசைட்ஸ், வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை போக்குகிறது. இதிலுள்ள அலிசின் ஆன்டி மைக்ரோபியல் தன்மை கொண்டு இருப்பதால் மருக்களை அழித்து வளர்ச்சியை தடுக்கிறது. இதன் ஆன்டி செப்டிக் பொருட்கள் மருக்களை சீக்கிரமாகவே உதிர்த்து விடுகிறது.
பயன்படுத்தும் முறை
சில பூண்டு துண்டுகளை எடுத்து நன்றாக நசுக்கி பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இப்பொழுது பாதிக்கப்பட்ட இடத்தில் அதை தடவி சில மணி நேரங்கள் வைத்திருங்கள். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை என செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
டக் டேப்
டக் டேக் முறை மருக்களை நீக்க புகழ்பெற்ற முறையாகும். ஒரு சிறிய ளவு டக் டேப்பை கொண்டு மருக்களை கவர் செய்து விட வேண்டும். நீங்கள் இப்படி ஆக்ஸிஜன் செல்வதை தடை செய்யும் போது மருக்கள் காய்ந்து சில நாட்களில் உதிர்ந்து விடும். ஒவ்வொரு முறையும் டேப்பை மாற்றிக் கொண்டு இருங்கள்.
நெயில் பாலிஷ்
இது மருக்களுக்கு காரணமான வைரஸை அழித்து எளிதாக ரிமூவ் செய்து விடுகிறது. நெயில் பாலிஷை அதில் அப்ளே செய்து காய விடுங்கள். இப்படி செய்யும் போது மருக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் காய்ந்து இறந்து விடும். பிறகு வாஷ் செய்து விட்டு ஒவ்வொரு 8 மணி நேரமும் அப்ளே செய்யுங்கள். இதை மருக்கள் உதிரும் வரை செய்து வாருங்கள்.