Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சிரித்தாலும் கோபப்பட்டாலும் உடனே தூங்கிவிடும் விசித்திர பெண்!
உணர்ச்சி வசப்படும் போது எல்லாம் தூங்கிவிடும் பெண்
இளம் தாய் ஒருவர் மிகவும் அரிதான ஒரு ஆரோக்கிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார். இவர் சோகமாகவோ, சிரிக்கும் போதோ அல்லது உச்சமடைந்தாலோ உடனடியாக தூங்கிவிடுவார். ஆழமான உணர்ச்சிகளின் போது இவருக்கு உடனடியாக தூக்கம் வந்துவிடுகிறது. இவரது வயது 20. இவர் தனது பிரசவ காலத்திலும் கூட இந்த பிரச்சனையை அனுபவத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 மணிநேர தூக்கம்
இவர் டிவியில் ஏதேனும் நகைச்சுவைகளை கண்டு சிரித்தால், இவரது தலை தூக்குவதற்காக சாய்ந்துவிடுகிறது. இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 13 மணிநேரம் தூங்குகிறாராம். இவர் நகைச்சுவைகளை கேட்டாலோ, சோகமாக இருந்தாலோ அல்லது உடலுறவின் போதும் கூட தூங்கிவிடுகிறார்.

மூளை மட்டும் வேலை செய்யும்
நான் சாதாரணமாக ஏதேனும் நகைச்சுவையை கேட்டு சிரித்தாலும் கூட, என் தலை மார்பை நோக்கி சாய்ந்து விடும். அடுத்த நிமிடம் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. நான் தரையில் விழுந்துவிடுவேன். நான் தூங்குவது போல் தோன்றினாலும் கூட,பிறர் பேசுவது எனக்கு கேட்கும். ஆனால் என்னால் அசையவோ அல்லது நகரவோ முடியாது.

உணர்ச்சி அடங்கும் வரை தூக்கம்
எனது உணர்ச்சி அடங்கும் வரை என்னால் பிறருக்கு பதிலளிக்கவும், அசையும் முடியாது. மற்றவர்களது பார்வைக்கு நான் தூங்கிக்கொண்டிருப்பது போல தெரியும். உடலுறவின் போதும் கூட நான் தூங்கிவிடுவேன். ஆனால் என் கணவர் என் நிலையை புரிந்து கொண்டு என்னை ஏற்றுக்கொண்டார், அனைவரும் இது போன்று இருக்கமாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிப்பருவம்
நான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது, பாடம் நடத்தும் போது, பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, வீடு திரும்பும் போது கூட வழியிலேயே தூங்கிவிடுவேன். சாப்பிடும் போது கூட இடையிலேயே தூங்கிவிடுவேன் என்கிறார்.

மாலை மூன்றுமணி வரை தூக்கம்!
விடுமுறை நாட்களில் இவர் மாலை மூன்று வரை தூங்கிவிடுவாராம். இவரது கையில் அவரது அத்தை 2 கப் காபியை கொடுத்துள்ளார். அப்போது இவர் சிரித்துவிட்டார். இதனால் உடனடியாக காபியை கீழே போட்டுவிட்டு தூங்கிவிட்டாராம்.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை
இவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது. இது மூளையை தாக்கியுள்ளதால், இவர் எந்த நேரத்தில் தூங்க வேண்டும் என்று மூளை கட்டளையிடும் பாதிப்புள்ளாகியுள்ளது. இதனால் தான் இவர் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்.

தூக்கி வந்த சகோதரி
இவர் பிட்சா சாப்பிட அவரது சகோதாரியுடன் ஒரு முறை வெளியில் சென்றுள்ளார். அந்த இடத்தில் இவருக்கு சிரிப்பு வந்ததால், டைனின் டேபிள் மீதே படுத்து உறங்கிவிட்டாராம். இதனால் அவரது சகோதாரி அந்த இடத்திலிருந்து வீடு வரை இவரை தூக்கிக்கொண்டே வந்துள்ளார்.



Click it and Unblock the Notifications