Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
உடம்பு சரியில்லாதப்போ இந்த உணவுகளையெல்லாம் சாப்பிடக் கூடாது!!
உடல் நலம் சரியில்லாதபோது நாம் சாப்பிடும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். இங்கே சொல்லப்பட்டிருக்கும் முக்கிய உணவுகளை அந்த சமயத்தில் தவிர்ப்பது நலம் தரும்.
காய்ச்சல் இருமல் என எது இருந்தாலும் நாம் சாப்பிடும் உணவுகளும் பாதி நோயை தீர்க்கும். ஆகவே சாப்பிடும் உணவுகளை கவனமுடன் தேந்தெடுப்பது முக்கியம்.
எப்படி உணவுகள் தேடி சாப்பிட வேண்டுமோ அது போல் சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதும் முக்கியம்.

எந்த வகையான உணவுகள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும்போது சாப்பிடக் கூடாது என பார்க்கலாம்.

காஃபி :
வயிறு சம்பந்தமான கோளாறுகள் இருந்தால் அந்த சமயங்களில் காஃபி அறவே தவிர்க்க வேண்டும். காஃபின் வாந்தியை தூண்டும்.
அதே சமயங்களில் காய்ச்சல் இருக்கும்போதும் காஃபி குடிப்பதால் உடலில் அதிக வெப்பம் உருவாகி காய்ச்சலை அதிகரிக்கச் செய்து விடும்.

ஆரஞ்சு பழச் சாறு :
உங்களுக்கு இருமல், தொண்டையில் தொற்று உண்டானால் அந்த சமயங்களில் ஆரஞ்சு சாறு குடிப்பதை நிறுத்த வேண்டும். இதிலுள்ள சிட்ரிக் அமிலம் தொண்டையில் இன்னும் எரிச்சலை உண்டாக்கும். இதனால் இருமல் இன்னும் அதிகமாகும்.

இனிப்பு :
எளிதில் இனிப்பு ஜீரணிப்பதில்லை. வயிறு சம்பந்தபட்ட பிரச்சனையை அதிகப்படுத்திவிடும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும். காய்ச்சல், வயிற்றுக் கோளாறு அல்லது எந்த நோயானாலும் அந்த சமயங்களில் இனிப்பை தவிர்க்க வேண்டும்.

நொறுக்கு தீனிகள் :
எந்த வகையான உடல் பாதிப்பு இருந்தாலும் ஜீரண உறுப்புகள் மந்தமாகிவிடும். எனவே அப்போது நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவை உடலில் செரிமான பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

பால் :
காய்ச்சல், சளி அல்லது வயிற்றுகோளாறு இருக்கும்போது பாலை தவிர்க்க வேண்டும். பால் சளியை பெருக்கி விடும். செரிமானம் ஆகாமல் வாந்தியை உண்டாக்கும்.

கொழுப்பு உணவுகள் :
கொழுப்பு மிக்க்க உணவுகள் குடலிலேயே அதிக நேரம் தங்கும். செரிமானம் ஆவதற்கு தாமதமாவதால் அதனை அவ்வளவு எளிதில் சாப்பிட முடியாது. ஆகவே கொழுப்பு மிக்க உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.



Click it and Unblock the Notifications