Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
உடலில் ஏற்படும் சுளுக்கை போக்கும் ஒரு அருமையான நாட்டு வைத்தியம் !!
உடல் உபாதைகளுக்கு சமையறையில் இருக்கும் எந்த பொருட்களால் குணப்படுத்தலாம் என இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படும் நேரங்களில் அனைவருக்கும் முதலில் செய்யப்படுவது முதலுதவி. இந்த முதலுதவி பலரது உயிர்களை காப்பாற்றி உள்ளது. விபத்து ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் முதலுதவு செய்வதால் சிறிது நேரத்திற்கு பிரச்சனை தீவிரமடைவதை தடுக்க முடியும்.
இதற்காவே அனைத்து பொது இடங்களிலும் முதலுதவிக்கென்று பெட்டிகள் இருந்தாலும் நமது வீட்டில் உள்ள சமையல் அறைகளில் உள்ள பொருட்களை வைத்து முதலுதவி செய்ய முடியும்.

முதலுதவி பெட்டிகளில் உள்ள பேன்டேஜ் மற்றும் இதர பொருட்கள் இருக்கும் ஆனால் அவை அனைத்து வகைகளிலும் உதவினாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை உபயோகித்தால் எந்த வித பக்கவிளைவுகளும் இருக்காது. மிகவும் எளியது மற்றும் பாதுகாப்பானதும் கூட. வாருங்கள் இப்போது நாம் வீட்டில் உள்ள சில சமையல் அறைப் பொருட்கள் எப்படியெல்லாம் முதலுதவி செய்வதற்கு உபயோகிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்...

பூண்டு
பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக். இதனை பூச்சிக் கடி போன்ற பிரச்சனைகளுக்கான முதலுதலிக்கு உபயோகிக்கலாம்.
சில கிராமப்புற பகுதிகளில், பூண்டு சாறு மற்றும் உப்பு கலவையை சுளுக்குகள், சிறு காயங்கள் மற்றும் மணிக்கட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில், நீங்கள் காது தொற்றுநோயை அகற்ற காதுகளில் ஒரு சிறிய துண்டு பூண்டு வைக்கலாம். நிச்சயமாக இது பாதுகாப்பான முறை என்று சொல்ல முடியாது, ஏனெனில் பூண்டு துண்டு காதுகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.

பேக்கிங் சோடா
தேனீக்கள் கொட்டினால் அதற்கு கண்டிப்பாக உதவக்கூடிய வைத்தியம் என்றால் அது பேக்கிங் சோடா. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலந்து, தேனீக்கள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும்.
இது வீக்கம் ஏற்படாமல் தடுக்கும். ஆனால், இது நிரந்தர முடிவல்ல தற்காலிக மருத்துவம் தான். நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.

கற்றாழை
வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு கற்றாழை ஜெல் சிறந்த முதலுதவியாக உதவக்கூடியது. இதனை அடிப்பட்ட இடங்களில் தேய்க்கும் போது எரிச்சல் குறைந்து, குளிர்ச்சியைத் தரக்கூடியது.

தேன்
தேனில் அற்புத குணங்கள் கீழே விழுந்து ஏற்பட்ட காயங்களுக்கும், வெட்டு காயங்களுக்கும் சிறந்து உதவக்கூடியது. தேனில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி- பாக்டீரியல் குணங்களும் சிறந்த முதலுதவி பொருளாக செயல்படுகிறது.

மஞ்சள் தூள்
முதலுதவி என்றாலே முதலில் அனைவரின் நினைவிற்கும் வருவது மஞ்சள் தூள். ஒரு சிறந்த கிருமி நானிசியாக இது செய்லபடக்கூடியது. அடிபட்ட இடங்களில், வெட்டுகாயங்களில் மஞ்சள் தூளை தேய்ப்பது சிறந்த முதலுதவி. நோய் தொற்றுக்களை போக்குவதற்கு மஞ்சள் தூளில் உள்ள அழற்ஜி நீக்கும தன்மை உதவுகிறது.

ஆப்பிள் சிடர் வினிகர்
முதலுதவி பொருட்களில் ஆப்பிள் விடர் வினிகரும் அடம் பிடித்தள்ளது. தேனீ கொட்டுயது அல்லது சில வகை அரிப்பு பிரச்சனைக்கு ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது.

துளசி
துளசி கோயில்களில் சாமிக்கு அர்ச்சனை செய்வதற்கும் மட்டும் பயன்படுவதல்ல. கொசுக்கடி மற்றும் சரும அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு முதலுதவி செய்வதிலும் துளசி மிகவும் உதவக்கூடியது.



Click it and Unblock the Notifications











