Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
உடல் பிரச்சனைகளை தீர்க்கும் சுண்ணாம்பின் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா?
சுண்ணாம்பு கால்சியம் கார்பனேட் என்பதுடன் பல பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. சுண்ணாம்பி எந்தவிதமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என விளக்கும் கட்டுரைதான் இது.
சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. சுண்ணாம்பை வெள்ளைப் பூச்சுக்களுக்கும், வெற்றிலை போடவும்தான் அதிக பட்சம் நாம் பயன்படுத்துகிறோம்.

வீட்டின் சுவருக்கு சுண்ணாம்பை பூச்சுவதால் வீட்டில் பூச்சிகள் நெருங்காது. புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாக்கப்படுறது.
அதுபோல் நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை வெற்றில் போடுவதால் நமது எலும்புகலுக்கு கிடைக்கிறது. அப்படியான சுண்ணாம்பை எதற்கெல்லாம் நாம் உபயோகப்படுத்த முடியும் என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்!!

விஷப் பூச்சிகளின் கடிகளுக்கு :
விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டைவலிக்கு :
இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலை :
மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகளுக்கு :
கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்.

தலைவலிக்கு :
தலையில் நீர்கோர்த்துக் கொண்டு தலை பாரமாகி விடுகிறதா? எளிய வழி இதுதான். இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், கால் டீஸ்பூன் அளவு சுண்ணாம்பை குழைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் பத்து போட்டால். நன்கு தூக்கம் வருவதுடன், எழும்போது தலையில் நீர் கோர்த்ததால் உண்டான தலைபாரம் மற்றும் வலியும் போய் விடும்.



Click it and Unblock the Notifications











