Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
தாங்க முடியாத பல்வலியா? இந்த பாட்டி வைத்தியங்களை ட்ரை பண்ணுங்களேன்!!
பல்வலி சாதரணமானது அல்ல. உங்கள் ஆரோக்கியத்தை கூறுவதில் பற்களுக்கும் பங்கு உள்ளது. ஆரோக்கியமற்ற பற்கள் உடலில் பல உபாதைகளை வரவழைக்கும். பல்வலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியங்களை காணலாம்
தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள். அதிலும் பல் வலி தாங்க முடியாதோடு சாப்பிடவும் முடியாமல் அவஸ்தையை தரும். பல்வலியை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

ஆனால் வலியை குறையச் செயலாம். வலியை மறக்க தற்காலிகமாக மாத்திரை எடுத்துக் கொள்வதால் வலி குறையுமே தவிர நிரந்தர பலன் தராது. அதன் வகையில் இங்கே சொல்லப்பட்டிருக்கும் இயற்கை வைத்தியங்கள் பற்களுக்கு மற்றும் ஈறிற்கு வலிமை தந்து வலியை எப்போதும் போக்குகிறது.

கடுகு எண்ணெய் :
கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு கலந்து பற்களில் தடவினால் வலி குறையும். ஈறு பலப்படும்.

ஆலமரப் பட்டை :
ஆலமரப்பட்டையை பொடி செய்து தினமும் பல் விளக்கி வந்தால் பற்களும் ஈறும் பலப்படும். வலி மறைந்துவிடும்.

கிராம்பு மற்றும் கொட்டைபாக்கு :
கிராம்பு மற்றும் கொட்டைப் பாக்கை சம அளவு பொடி செய்து பல் விளக்கி வாருங்கள். பல்வலியும் குறைந்துவிடும்.

அருகம்புல் சாறு:
அருகம்புல்லில் இருந்து சாறு எடுத்து அவற்றை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறு களில் உள்ள நச்சுகளைப் பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய்த் தொற்றை கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக் கொள்கிறது. மேலும் அருகம்புல் செடியை வாயிலிட்டு மென்று பல் வலியை போக்கலாம்.

மிளகு மற்றும் உப்பு :
மிளகு கலந்த உப்புகூட வீட்டில் பல் வலிக்கு சிறந்த மருந்தாகும். சம அளவு மிளகு, உப்பு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்தமுறையை தினமும் சில நாள்களுக்கு செய்து வந்தால் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.



Click it and Unblock the Notifications