For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது எப்படி?

வெரிகோஸ் குணமாக்கும் ஆயுர்வேத வைத்தியமுறையை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

By Gnaana
|

வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் பாதிப்புகள், நடுத்தர வயதுடையோர் மற்றும் வயது முதிர்ந்தோரிடம் அதிகம் காணப்படும் ஒரு வியாதி. ஆண்களைவிட பெண்களே, இந்த வியாதியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக நீண்ட நேரம் நிற்பதால், கால்களில் உள்ள நரம்புகள் சுருண்டு, இரத்த ஓட்டம் தடைபட்டு, இடுப்பிலிருந்து கால் பாதம் வரை, விண்ணென்று வலி ஏறும், இதுவே நாளடைவில், நரம்பு மற்றும் இதய பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும் தன்மைகள் நிரம்பியதாக, காணப்படுகிறது.

நரம்புச்சுருட்டல் என்றால் என்ன?

உடலில் உள்ள இயல்பான இரத்த ஓட்டம் கால்களில், சீரற்ற நிலையில் தடைபட்டு இயங்குவதே, இந்த வியாதிக்கு மூல காரணமாக அமைகிறது.

இரத்த நாளங்களில் உள்ள சுரப்பிகளின் தளர்ச்சிகளால், இரத்தம் பின்னேறி, ஒரு நிலையில், அதிக இரத்த தேக்கம் காரணமாக, எதிர் திசையில் பயணித்து, இரத்த நாளங்கள் உப்பிவிடுகின்றன.. இதுவே, வெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டல் வியாதியாக அறியப்படுகிறது.

Ayurvedic remedies to Vericose vein

இந்த நரம்புச்சுருட்டல் பாதிப்புகள் நாம் கண்களால் காணும் அளவுக்கு, இரத்த பாதிப்புள்ள தடித்த இரத்த நாளங்கள், சுருண்டு, வலைப்பின்னல்கள் போல, இடுப்பின் கீழ் பின்புறத்தில் இருந்து பாதம் வரை, காணப்படும். சிலருக்கு பாதிப்புகள் வெளித்தோற்றத்தில் காண இயலாத வண்ணம், மெலிதாகவும் இருக்கும்.

நரம்புச்சுருட்டலுக்கு காரணம்.

வெரிகோஸ் வெயின் பரம்பரை வியாதியாக அறியப்பட்டாலும், நரம்புச்சுருட்டலுக்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

அதிக நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், நாவிதர்கள், சலவைத்தொழிலாளர், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோர், காவலாளிகள், சீருடைப்பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய வேலைகளில் இருப்பவர்களை, அதிகம் பாதிக்கிறது.

பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் காணப்படும் நரம்புச்சுருட்டல், மகப்பேறுக்கு பின்னர், இயல்பாக மறைந்துவிடுகிறது.

அரிதாக சிலருக்கு, உடலில் அடிபட்டாலோ அல்லது இரத்த காயங்களாலோ வர வாய்ப்பிருக்கிறது. மேலும், நாள்பட்ட மலச்சிக்கலும், காரணமாக இருக்கிறது.

வெளியில் காண இயலாத நரம்புச்சுருட்டலை எவ்வாறு அறிவது?

தொடைப்பகுதிகளில், நரம்புகள் சுருண்டு, கட்டிகள் போல காணப்படும். சிலருக்கு, பாதம் மரத்து போகும், கால்களில் வலி, கணுக்கால் மற்றும் கால்கள் வீங்கும் நிலை உண்டாகும். சமயங்களில், இரத்த நாளங்களின் வெடிப்பில் இரத்த கசிவு ஏற்பட்டு அதனால், வலிகள் உண்டாகலாம். மேலும், சிலருக்கு சரும வியாதிகள் ஏற்படக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic remedies to Vericose vein

Ayurvedic remedies to Vericose vein
Story first published: Saturday, September 2, 2017, 17:37 [IST]
Desktop Bottom Promotion