Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
மலச்சிக்கலை குணப்படுத்த உதவும் 6 வகையான அற்புத ஜூஸ் !!
மலச்சிக்கலை குணப்படுத்த இந்த 6 வகையான பழச் சாறுகளை குடித்துப் பார்த்து அதன் நன்மைகளை பெறும் வகையில் இந்த க்ட்டுரை விவரித்துள்ளது.
மலச்சிக்கல் இன்று பெரும்பாலோனோருக்கு வரும் பிரச்சனை. போதுமான நெகிழ்வுத்தன்மை மற்றும் உடல் உழைப்பு இல்லாததால் இவ்வாறு உண்டாகக் கூடும்.
மலச்சிக்கலை குணப்படுத்தாவிட்டால் அது பைல்ஸ் மற்றும் பல பாதிப்புகளை தந்து விடும். பழச்சாறுகள் மலச்சிக்கலை குணப்படுத்த மிகவும் உதவி புரிகின்றன.

அவை மலத்தை இளக்குவதோடு,அதிக நார்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றன.
அவ்வாறு மலச்சிக்கலை தடுக்க உதவும் முக்கிய ஜூஸ் பற்றி காண்போம்.

ப்ருனே பழச் சாறு :
ப்ருனே பழங்களை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து பின் அதன் காம்பை அகற்றி ஒரு கப் அளவு நீர் கலந்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் சிறிது தேன் மற்றும் சீரகப்பொடி கலந்து குடிக்க வேண்டும்.

பேரிக்காய் பழச் சாறு :
பேரிக்காயை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு மிக்ஸியில் அரைக்கவும் தேவைபடும் நீர் சேர்த்து அரைக்க வேண்டும். அதன் பின் இதில் கால் மூடி எலுமிச்சை சாறு மற்றும் ஒருன் சிட்டிகை உப்பு க்லந்து குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.

ஆப்பிள் ஜூஸ் :
ஆப்பிளை துண்டாக அரிந்து பின் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு சிறிது சோம்புப் பொடி கலந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு ஜூஸ் :
ஆரஞ்சு சுளைகளில் விதைகளை நீக்கிய பின் சிறிது நீர் கலந்து ஜூஸாக்கி குடிக்க வேண்டும். இதிலுள்ள நார்சத்து குடலியக்கத்திற்கு பெரிதும் உதவுவதால் மலச்சிக்கல் குணமாகும்.

எலுமிச்சை சாறு :
எலுமிச்சையில் நீர் சேர்த்து ஜூஸ் செய்யவும். பின் அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் சீரகப் பொடி கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வாரம் 4 நாட்கள் இவ்வாறு குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது



Click it and Unblock the Notifications