Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பக்கவாதத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் இவைகள்!
உலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது. நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரையும் இந்த பக்க வாதம் தாக்கும்.
பக்கவாதம் என்பது கை கால் செயலிழந்து, பேச்சு குழறும் ஒரு வியாதி. மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் கிடைக்காத போது, மூளை கட்டளையிட முடியாமல் உடல் தன் கட்டுப்பாடை இழக்கும். இதனால் பேச்சு குழறி, கைகால் மரத்து போய், கண் பார்வை மங்கலாகி விடும்.
இந்த வியாதியை முன்கூட்டியே அறியலாம். பிரச்சனைகள் உண்டாகும்போது நமது உடல் சில சமிக்ஞைகளை நமக்கு அளிக்கிறது. இதனை நாம் கண்டறிந்து முன்னெச்செரிக்கையாக சிகிச்சை அளித்தால் நம்மால் பக்கவாதத்தை தடுக்க முடியும்.

தற்காலிக பக்கவாதம்
தற்காலிக பக்கவாதம் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குவதால் அல்லது அடைபட்டால் , மூளைக்கு தேவையான ரத்த ஓட்டம் குறையும். இதனால் உண்டாகும் பாதிப்பு தற்காலிக பக்க வாதம்.

தொடர் பக்கவாதம் :
இதில் ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவு உண்டாவதால் அல்லது ரத்தம் உறைந்து விடுவதால் உண்டாகும் பாதிப்புதான் தொடர் பக்கவாதம்.

நோய்க்கான காரணங்கள்:
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக பருமன், புகைப் பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பலான வாழ்க்கை முறை, மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.

இந்த நோயை எப்படி முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம்:
இந்த நோய் வந்த 3 மணி நேரத்திற்குள் கொண்டு சென்றால் சிகிச்சை பலனளிக்கும். அதேபோல் வருவதற்கு ஒரு மாதம் முன்னரே சில அறிகுறிகளை நமது உடல் காண்பிக்கும்.

வருவதற்கான அறிகுறிகள் :
மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அடிக்கடி தொடர் விக்கல் உண்டாகும். அடிக்கடி மயக்கம், உடல் சோர்வு, தலைவலி, உடல் மெலிதல், வலிப்பு வருவது, ஆகியவைகள் பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள்.
இவைகள் அடிக்கடி தென்பட்டால் பக்கவாதத்திற்கான ஆபத்து நெருங்கவுள்ளது என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications











