Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
பக்கவாதத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் இவைகள்!
உலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது. நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரையும் இந்த பக்க வாதம் தாக்கும்.
பக்கவாதம் என்பது கை கால் செயலிழந்து, பேச்சு குழறும் ஒரு வியாதி. மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் கிடைக்காத போது, மூளை கட்டளையிட முடியாமல் உடல் தன் கட்டுப்பாடை இழக்கும். இதனால் பேச்சு குழறி, கைகால் மரத்து போய், கண் பார்வை மங்கலாகி விடும்.
இந்த வியாதியை முன்கூட்டியே அறியலாம். பிரச்சனைகள் உண்டாகும்போது நமது உடல் சில சமிக்ஞைகளை நமக்கு அளிக்கிறது. இதனை நாம் கண்டறிந்து முன்னெச்செரிக்கையாக சிகிச்சை அளித்தால் நம்மால் பக்கவாதத்தை தடுக்க முடியும்.

தற்காலிக பக்கவாதம்
தற்காலிக பக்கவாதம் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குவதால் அல்லது அடைபட்டால் , மூளைக்கு தேவையான ரத்த ஓட்டம் குறையும். இதனால் உண்டாகும் பாதிப்பு தற்காலிக பக்க வாதம்.

தொடர் பக்கவாதம் :
இதில் ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவு உண்டாவதால் அல்லது ரத்தம் உறைந்து விடுவதால் உண்டாகும் பாதிப்புதான் தொடர் பக்கவாதம்.

நோய்க்கான காரணங்கள்:
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக பருமன், புகைப் பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பலான வாழ்க்கை முறை, மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.

இந்த நோயை எப்படி முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம்:
இந்த நோய் வந்த 3 மணி நேரத்திற்குள் கொண்டு சென்றால் சிகிச்சை பலனளிக்கும். அதேபோல் வருவதற்கு ஒரு மாதம் முன்னரே சில அறிகுறிகளை நமது உடல் காண்பிக்கும்.

வருவதற்கான அறிகுறிகள் :
மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அடிக்கடி தொடர் விக்கல் உண்டாகும். அடிக்கடி மயக்கம், உடல் சோர்வு, தலைவலி, உடல் மெலிதல், வலிப்பு வருவது, ஆகியவைகள் பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள்.
இவைகள் அடிக்கடி தென்பட்டால் பக்கவாதத்திற்கான ஆபத்து நெருங்கவுள்ளது என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications