Latest Updates
-
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
அந்தரங்கப்பகுதிகளில் அலர்ஜியா? கவலை வேண்டாம்.. இதல்லாம் யூஸ் பண்ணுங்க!!
பெண்களுக்கு அந்தரங்கப்பகுதிகளில் வரும் பிரச்சனைகளை வெளியே சொல்வதில் மிகுந்த தயக்கம் இருக்கும். இதற்காகவே மருத்துவரிடம் செல்லாமல் நாட்களை கடத்துவார்கள். இது முற்றிலும் தவறு. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை ஒத்திப் போடாமால் கையோடு அதனை கவனிப்பது அவசியம்.

பிறப்புறுப்பில் சிலருக்கு மரு போல சிறி சிறு கொப்புளங்கள் வரும். இது வைரஸினால் உண்டாகும் தொற்று. இதனால் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாகும். அதை அப்படியே விட்டால் மேலும் அந்த தொற்று பரவி, தீவிர பிரச்சனையை தரும்.
ஆப்பிள் சைடர் வினிகர் :
ஆப்பிள் சைடர் வினிகர் கிருமி நாசினி. இந்த சிறு கொப்புளங்களுக்கு காரணமான வைரஸை கொல்லும் ஆற்றல் ஆப்பிள் சைடர் வினிகருக்கு உள்ளது.
ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பஞ்சினால்
நனைத்து, கொப்புளங்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளை செய்தால் ஓரிரு நார்களிலேயே கொப்புளங்கள் மறைந்து விடும்.
தேயிலை மர எண்ணெய் :
தேயிலை மர எண்ணெய் ஒரு ஆன்டி செப்டிக். கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. இவை கொப்புளங்கள் மீது மட்டுமே செயல்படும். சருமத்தை சிறிதும் பாதிக்காது.
தேயிலை மர எண்ணெய் செறிவு மிகுந்தவை. அதனால் அப்படியே அதனை உபயோகப்படுத்தக் கூடாது. நீர்த்த நிலையில்தான் உபயோகிக்க வேண்டும். எனவே அதனை, சம அளவு நீரில் கலந்து, கொப்புளங்கள் மீது பஞ்சினால் தடவுங்கள். விரைவில் கொப்புளங்கள் மாயமாய் மறைந்துவிடும்.
பூண்டு :
பூண்டு சிறந்த கிருமி நாசினி. இது கிருமிகளை அழித்து விடும். பூண்டு கேப்ஸ்யூல் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி அதிலிருக்கும் எண்ணெயை எடுத்து கொப்புளம் மீது தடவுங்கள். விரைவில் குணமாகும்.
வெங்காயம் ;
பூண்டைப் போன்றே வெங்காயத்திலும் அதே ஆற்றல் உண்டு. வெங்காயச் சாறில் சிறிது உப்பு சேர்த்து, கொப்புளம் மீது தடவினாலும், கொப்புளங்கள் ஆறிவிடும். உப்பிலும் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளதால் சீக்கிரம் பலன் கிடைக்கும்.
வாழைப்பழத் தோல் :
வாழைப் பழத் தோலில் நிறைய மருத்துவ குணங்களும் சத்துக்களும் உள்ளன. இவை கிருமி நாசினியும் கூட. இரவு தூங்கும் முன், வாழைப் பழத்தோலை கொப்புளங்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் கழுவிவிடலாம். விரைவில் கொப்புளங்களின் நிறம் மாறி , உதிர்ந்துவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















