Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
அந்தரங்கப்பகுதிகளில் அலர்ஜியா? கவலை வேண்டாம்.. இதல்லாம் யூஸ் பண்ணுங்க!!
பெண்களுக்கு அந்தரங்கப்பகுதிகளில் வரும் பிரச்சனைகளை வெளியே சொல்வதில் மிகுந்த தயக்கம் இருக்கும். இதற்காகவே மருத்துவரிடம் செல்லாமல் நாட்களை கடத்துவார்கள். இது முற்றிலும் தவறு. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை ஒத்திப் போடாமால் கையோடு அதனை கவனிப்பது அவசியம்.

பிறப்புறுப்பில் சிலருக்கு மரு போல சிறி சிறு கொப்புளங்கள் வரும். இது வைரஸினால் உண்டாகும் தொற்று. இதனால் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாகும். அதை அப்படியே விட்டால் மேலும் அந்த தொற்று பரவி, தீவிர பிரச்சனையை தரும்.
ஆப்பிள் சைடர் வினிகர் :
ஆப்பிள் சைடர் வினிகர் கிருமி நாசினி. இந்த சிறு கொப்புளங்களுக்கு காரணமான வைரஸை கொல்லும் ஆற்றல் ஆப்பிள் சைடர் வினிகருக்கு உள்ளது.
ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பஞ்சினால்
நனைத்து, கொப்புளங்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளை செய்தால் ஓரிரு நார்களிலேயே கொப்புளங்கள் மறைந்து விடும்.
தேயிலை மர எண்ணெய் :
தேயிலை மர எண்ணெய் ஒரு ஆன்டி செப்டிக். கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளவை. இவை கொப்புளங்கள் மீது மட்டுமே செயல்படும். சருமத்தை சிறிதும் பாதிக்காது.
தேயிலை மர எண்ணெய் செறிவு மிகுந்தவை. அதனால் அப்படியே அதனை உபயோகப்படுத்தக் கூடாது. நீர்த்த நிலையில்தான் உபயோகிக்க வேண்டும். எனவே அதனை, சம அளவு நீரில் கலந்து, கொப்புளங்கள் மீது பஞ்சினால் தடவுங்கள். விரைவில் கொப்புளங்கள் மாயமாய் மறைந்துவிடும்.
பூண்டு :
பூண்டு சிறந்த கிருமி நாசினி. இது கிருமிகளை அழித்து விடும். பூண்டு கேப்ஸ்யூல் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி அதிலிருக்கும் எண்ணெயை எடுத்து கொப்புளம் மீது தடவுங்கள். விரைவில் குணமாகும்.
வெங்காயம் ;
பூண்டைப் போன்றே வெங்காயத்திலும் அதே ஆற்றல் உண்டு. வெங்காயச் சாறில் சிறிது உப்பு சேர்த்து, கொப்புளம் மீது தடவினாலும், கொப்புளங்கள் ஆறிவிடும். உப்பிலும் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளதால் சீக்கிரம் பலன் கிடைக்கும்.
வாழைப்பழத் தோல் :
வாழைப் பழத் தோலில் நிறைய மருத்துவ குணங்களும் சத்துக்களும் உள்ளன. இவை கிருமி நாசினியும் கூட. இரவு தூங்கும் முன், வாழைப் பழத்தோலை கொப்புளங்களின் மீது தடவிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் கழுவிவிடலாம். விரைவில் கொப்புளங்களின் நிறம் மாறி , உதிர்ந்துவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















