Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
குளிர் காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி !!
வெயில் காலத்தில் வெளியே ஓடி ஆடி வேலை செய்வதாலும், வெப்பத்தினால் வியர்வையாய் கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் மழை மற்றும் குளிர்காலத்தில் வெளியே போக முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பீர்கள்.
இதனால் உடல் எடை கூடும். ஆரோக்கியம் கெடும். அடிக்கடி உடல் சரியில்லாமல் போகும். ஆரோக்கியமான சின்ன சின்ன விஷயங்களை நாம் கடைபிடிக்காததால்தான் அடிக்கடி பாதிப்படைகிறோம். எவ்வாறு குளிர் மற்றும் மழைக்காலங்களில் நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என பார்க்கலாம்.

காலை வேளை உணவை தவிர்க்காதீர்கள் :
குளிர்காலத்தில் பெரும்பாலோனோர் காலை வேளையில் சாப்பிட மாட்டார்கள். குளிர்காலத்தில் ஜீரண சக்தி சற்று குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயங்களில் குளிருக்கு இதமாய் காபி டீ என குடித்து, காலை உணவை தவிர்த்து விடுவார்கள்.
இது மிகவும் தவறு. இப்படி செய்தால் உடல் எடை கூடும். உடலில் வாய்வு அதிகமாகி அசிடிடி ஏற்படுத்திவிடும். மேலும் மதியம் அதிக உணவு சாப்பிடத் தோன்றும். உடல் பருமனை நீங்களாகவே எற்படுத்திக் கொள்வீர்கள்.
வீட்டிலேயே முடங்கி இருக்காதீர்கள் :
குளிருக்கு பயந்து வீட்டிலேயே இருப்பது சோம்பேறித்தனத்திற்கு வழிவகுக்கும். மேலும் உடல் நலம் சரியில்லாதது போலவே உணர்வீர்கள்.
உடல் அறையின் வெப்பத்திலேயே இருக்கும்போது வெளியே குளிர் காற்று பட்டாலே உடலுக்குள் கிருமிகள் எளிதில் தாக்கிவிடும். ஆகவே சுதந்திரமாய் குளிருக்கு பழக்கப்படுத்துங்கள்.
அப்போதுதான் நோய் எதிர்ப்பு செல்கள் அதிகமாய் உருவாகும். நல்ல காற்றை சுவாசிக்கும்போது, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.
ஜலதோஷம் காய்ச்சல் வராமல் இருக்க :
குளிர்காலத்தில் எளிதில் கிருமிகள் தாக்கும் தான். ஆனால் நோய் எதிர்ப்புதிறனை வளர்த்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் உடல் எதிர்த்து போராடும்.
வீட்டிற்குள்ளேயே இருக்கும் போது போதிய அளவு ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காது. நீர்சத்துக் குறைந்துவிடும். இதனால்தான் உடல் பாதிப்பு ஏற்படும். ஜலதோஷம் காய்ச்சல் உண்டாகும்.
ஆகவே குளிர்காலங்களில் காலையில் இருக்கும் புதிய காற்றில் மூச்சுப்பயிற்சி எடுங்கள். இவை உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்லும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
நீர் சத்தி இழக்காமல் இருக்க வேண்டும் :
குளிர் காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும், தொண்டை வறண்டு போகாமல் பாத்துக்கொள்ள வேண்டும்.
வெந்நீர் அருந்துவது மிகவும் சிறந்தது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்த்து தட்பவெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.
வெப்பம் தரும் உணவுகளை உண்ணவேண்டும் :
காய்கறிகள், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் நிறைந்த உணவுகள் எண்ணெய் மற்றும் மீன் பயன்படுத்தலாம்.
சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
இஞ்சியை குளிர்காலத்தில் சேர்த்தால் ஜலதோஷம் வராமல் பாதுகாப்பு வளையம் போல் செயல்படும். குளிர்காலத்தில் வளரும் அஜீரண பிரச்சனையை தவிர்க்கலாம். காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் சாப்பிடுங்கள் உடலை சூடாக வைத்து கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




