Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்..
பக்கவாதம் வருவதற்கு முன் எப்போது அதன் அறிகுறிகளை அறியலாம்?
பக்கவாதம் மூளையின் செயல்பாட்டில் உண்டாகும் கோளாறு. இதற்கு ரத்த குழாய்கலின் உண்டாகும் பாதிப்பு காரனம். சர்க்கரை வியாதி, இதய நோய்கள் இது வருவதன் முக்கிய காரணம். இதன் அறிகுறிகளை காண்போம்.
பக்கவாதம் பொதுவாக 50 வயதை க்டனத பின் தாக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் உண்டாகும் பாதிப்பினால் பக்க வாதம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இதயம், மூளை, உடல் பருமம் ஆகிய்வற்றிற்கும் தொடர்பு உள்ளன.

யாருக்கு வரலாம்?
முக்கியமான இதய நோய்களும், பக்கவாதத்திற்கு நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. ஆகவே இதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் பக்க வாதம் வராமல் காத்திடுவது முக்கியம்.
பக்கவாதம் வருவதற்கு முன் உண்டாகும் அறிகுறிகளை எப்படி கண்டறிவது என தெரிந்து வைத்துள்ளீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

எதையும் அழுந்த பிடிக்க முடியாது :
உங்களால் எந்த ஒரு பொருளையும் அழுத்தி பிடிக்க முடியாது. டிவியின் ரிமோட் பட்டனை அமுத்தவோ அல்லது கணிணியில் டைப் செய்யவோ இயலாதபடி தோன்றினால் அது பக்க வாதத்தின் அறிகுறியாகும்.

நேராக சிரிக்க முடியாது :
முகம் வீங்கி, சரியாக சிரிக்க முடியாதபடி உங்களுக்கு தோணினால் மூளைக்கு சரியாக ரத்தம் போகவில்லை என்று அர்த்தம். ஒரு பக்கமாக வாய் கோணுவது போல் தோன்றும்.

பேச்சு குழறுதல் :
உங்களால் சரியாக பேச முடியாது. குழறும். உடலில் ஏதாவது ஒரு பாகம் அசைக்க வேண்டும் என நினைக்கும்போது அசைக்க முடியாது. இந்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேராக நிற்க முடியாது :
உங்களால் ஸ்திரமாக நிற்க முடியாமல் தள்ளாடுவதைப் போல் உணர்ந்தால், அல்லது தலை சுற்றுவது போலிருந்தால் பக்க வாதத்தின் அறிகுறியாகும். சம நிலையிழந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடும்.

கொடுமையான தலைவலி :
தலைவலி அசாதரணமாக இருக்கும். தாங்க முடியாத அளவிற்கு தலை நேராக நிற்க முடியாத அளவிற்கு தலைவலி உண்டாகும். இதற்கு காரனம் ரத்த குழாய்கள் வெடித்து ரத்தக் கசிவு உண்டாகியிருப்பதே காரணமாக இருக்கலாம்.

கண்பார்வை :
திடீரென கண்பார்வை குறைந்து மங்கலாக வெளிப்படும் அல்லது கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடலாம். இது பக்கவாதத்தின் தாக்கம் பொறுத்து உங்கள் பார்வையின் திறன் மாறுபடும்.



Click it and Unblock the Notifications