Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
பக்கவாதம் வருவதற்கு முன் எப்போது அதன் அறிகுறிகளை அறியலாம்?
பக்கவாதம் மூளையின் செயல்பாட்டில் உண்டாகும் கோளாறு. இதற்கு ரத்த குழாய்கலின் உண்டாகும் பாதிப்பு காரனம். சர்க்கரை வியாதி, இதய நோய்கள் இது வருவதன் முக்கிய காரணம். இதன் அறிகுறிகளை காண்போம்.
பக்கவாதம் பொதுவாக 50 வயதை க்டனத பின் தாக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் உண்டாகும் பாதிப்பினால் பக்க வாதம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. இதயம், மூளை, உடல் பருமம் ஆகிய்வற்றிற்கும் தொடர்பு உள்ளன.

யாருக்கு வரலாம்?
முக்கியமான இதய நோய்களும், பக்கவாதத்திற்கு நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. ஆகவே இதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் பக்க வாதம் வராமல் காத்திடுவது முக்கியம்.
பக்கவாதம் வருவதற்கு முன் உண்டாகும் அறிகுறிகளை எப்படி கண்டறிவது என தெரிந்து வைத்துள்ளீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

எதையும் அழுந்த பிடிக்க முடியாது :
உங்களால் எந்த ஒரு பொருளையும் அழுத்தி பிடிக்க முடியாது. டிவியின் ரிமோட் பட்டனை அமுத்தவோ அல்லது கணிணியில் டைப் செய்யவோ இயலாதபடி தோன்றினால் அது பக்க வாதத்தின் அறிகுறியாகும்.

நேராக சிரிக்க முடியாது :
முகம் வீங்கி, சரியாக சிரிக்க முடியாதபடி உங்களுக்கு தோணினால் மூளைக்கு சரியாக ரத்தம் போகவில்லை என்று அர்த்தம். ஒரு பக்கமாக வாய் கோணுவது போல் தோன்றும்.

பேச்சு குழறுதல் :
உங்களால் சரியாக பேச முடியாது. குழறும். உடலில் ஏதாவது ஒரு பாகம் அசைக்க வேண்டும் என நினைக்கும்போது அசைக்க முடியாது. இந்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேராக நிற்க முடியாது :
உங்களால் ஸ்திரமாக நிற்க முடியாமல் தள்ளாடுவதைப் போல் உணர்ந்தால், அல்லது தலை சுற்றுவது போலிருந்தால் பக்க வாதத்தின் அறிகுறியாகும். சம நிலையிழந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடும்.

கொடுமையான தலைவலி :
தலைவலி அசாதரணமாக இருக்கும். தாங்க முடியாத அளவிற்கு தலை நேராக நிற்க முடியாத அளவிற்கு தலைவலி உண்டாகும். இதற்கு காரனம் ரத்த குழாய்கள் வெடித்து ரத்தக் கசிவு உண்டாகியிருப்பதே காரணமாக இருக்கலாம்.

கண்பார்வை :
திடீரென கண்பார்வை குறைந்து மங்கலாக வெளிப்படும் அல்லது கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடலாம். இது பக்கவாதத்தின் தாக்கம் பொறுத்து உங்கள் பார்வையின் திறன் மாறுபடும்.



Click it and Unblock the Notifications