Just In
- 4 min ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 1 hr ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 3 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வேகமான நடைப்பயிற்சி கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது
புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகளில் சிகிச்சை தருவதால், நினைவுத் திறன் குறைவாகவே இருக்கும். இவர்கள் வேகமாக நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சமீபமாக ஒரு ஆராய்ச்சி சொல்கின்றது.
புற்று நோயாளிகளுக்கு குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்கள் ஞாபக சக்தி குறைந்து காணப்படுவார்கள். இது சக்தி வாய்ந்த சிகிச்சைகளினால் உண்டாகிறது.
உணர்வு பூர்வமாக பெண்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பதால் எளிதில் நினைவுத் திறனை இழந்துவிடுகிறார்கள் என்று சிகாகோவில் உள்ள நார்வெஸ்டேர்ன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வாளர் சியோபென் ஃபிலிப்ஸ் கூறுகிறார்.
இந்த ஆய்வில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களை இரு குழுவாக பிரித்தனர். அதில் 1477 பெண்கள் ஒரு குழுவாகவும், 362 பெண்கள் மற்றுரு குழுவாகவும் இருந்தனர்.
இவர்களில் அதிக உடற்பயிற்சி கொடுத்து ஒரு குழுவிற்கும்,இயல்பான வேலைகளுடன் மற்றொரு குழுவையும் கண்காணித்தனர்.
இதில் அதிக நடை மற்றும் உடற்பயிற்சி செய்தவர்களின் நினைவுத் திறன் அதிகரித்திருக்கிறது. மேலும் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் கூடியிருக்கிறது. மன அழுத்தம் குறைந்ததாக தெரிவித்திருக்கின்றனர். சோதனைக் கருவிகளைக் கொண்டும் அவர்களிடம் ஆய்வு நடத்தியிருக்கின்றனர்.
ஆகவே ஆய்வாளர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போதிய நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்று உடலுக்கு பயிற்சி அளித்தால், மன அழுத்தம் மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றிலிருந்து விடுபடலாம் என்று கூறியிருக்கின்றனர்.