சாப்பிட்டத்துக்கு அப்புறம் உங்க வயிறு பானை மாதிரி வீங்கி இருக்கா? அப்ப இத குடிங்க...உடனே குறைஞ்சிடும்!

அதிகமாக அல்லது நிறைய உணவுகளை சாப்பிட்ட பிறகு வீக்கம், அசௌகரியம் மற்றும் வாய்வு போன்ற உணர்வுகளை சந்திப்பது பொதுவானது. பெரும்பாலான மக்கள் இந்த திடீர் சங்கடமான உணர்வை சரிசெய்ய மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

நீங்களும் வயிற்று வீக்கம் பிரச்சனையை அடிக்கடி சந்திக்கிறீர்களா? இதற்காக மாத்திரிகளை எடுத்துக்கொள்கிறீர்களா? ஆம். எனில், அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். அதிகளவு ஆன்டாக்சிட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக எடுத்துக்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

Homemade Drinks To Instantly Reduce Bloating​ In Tamil

வீட்டில் தயாரிக்கப்பட்ட சில எளிய பானங்கள் இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவும். இது வீக்கத்தை எளிதாகக் குறைக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். வீக்கத்தை உடனடியாக குறைக்க வீட்டில் தயாரிக்கப்படும் எளிதான பானங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பெருஞ்சீரகம் விதை தேநீர்

பெருஞ்சீரகம் விதைகளை கிரீன் டீயுடன் சேர்த்து ஒரு எளிய தேநீரை காய்ச்சி, சாப்பிட்ட பிறகு இந்த பானத்தை பருகினால் வீக்கம் குறையும். கருஞ்சீரகத்தின் கார்மினேட்டிவ் பண்புகள் மற்றும் பெருஞ்சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாயுவை இயற்கையாகவே சரி செய்யும்.

இந்த பானத்தை தயாரிக்க தண்ணீர் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை கொதிக்கவைக்க வேண்டும். அதில் சிறிது கிரீன் டீயை ஊற்றி, பானத்தை வடிகட்டி குடிக்க வேண்டும்.

புதினா தேநீர்

புதினா மற்றும் தேன் கலந்த தேநீரை குடிப்பது திறம்பட இரைப்பைக் குழாயின் தசைகளைத் தளர்த்த உதவும், இது வீக்கம் மற்றும் வாயுவைப் போக்க உதவும். புதிய அல்லது உலர்ந்த புதினா இலைகளை சூடான நீரில் ஊறவைத்து ஒரு கப் புதினா தேநீர் தயாரிக்க வேண்டும்.

இந்த பானத்தில் தேன் சேர்ப்பது, தேநீரின் செயல்திறனை அதிகரிக்க உதவும். மேலும், இது குணப்படுத்தும் மற்றும் மலமிளக்கிய பண்புகளை வழங்கும்.

எலுமிச்சை மற்றும் இஞ்சி டிடாக்ஸ் பானம்

இந்த பானத்தை தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், துருவிய இஞ்சியுடன் புதிதாக பிழிந்த எலுமிச்சை சாற்றை கலக்க வேண்டும். பின்னர், வடிக்கட்டி இந்த பானத்தை குடிக்கலாம். எலுமிச்சை செரிமானத்தைத் தூண்ட உதவுகிறது. இஞ்சி அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது.

இந்த இரண்டு பொருட்களும் கலந்த பானம் வீக்கத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

வெள்ளரி மற்றும் புதினா தண்ணீர்

இந்த பானத்தை தயாரிக்க, வெட்டப்பட்ட வெள்ளரிகள் மற்றும் லேசாக நசுக்கிய புதினா இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து அருந்தலாம். இந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வீக்கம் குறையும். ஏனென்றால், வெள்ளரிகளில் இயற்கையான டையூரிடிக் பண்புகள் இருப்பதால், நீர்ப்பிடிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இஞ்சி தேநீர்

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது செரிமான மண்டலத்தை தளர்த்த உதவும். ஒரு எளிய இஞ்சி தேநீர் தயாரிக்க, சூடான நீரில் புதிய இஞ்சித் துண்டுகளை அரைத்து சேர்க்க வேண்டும். பின்னர் இந்த பானத்தை வடிக்கட்டி குடிக்கலாம்.

வீக்கத்தைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும் எலுமிச்சை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை நீங்கள் இந்த பானத்தில் சேர்க்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion