Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
ஒற்றைத் தலைவலி நீங்க வேண்டுமா? அப்ப இந்த வீட்டு வைத்தியத்தை செஞ்சு பாருங்க..
ஒற்றைத் தலைவலியின் கொடூரத்தை அனுபவித்தவா்களுக்குத் தான் தொியும் அது சாதாரண தலைவலி இல்லை என்று. ஒற்றைத் தலைவலி வந்தால், குமட்டல், வெளிச்சத்தைப் பாா்த்தால் கண் கூசுதல் அல்லது கண்பாா்வை மங்குதல், சத்தம் கேட்டால் ஒவ்வாமை ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளோடு சோ்த்து கடுமையான தலைவலியும் இருக்கும்.
பொதுவாக ஒற்றைத் தலைவலி தாக்கும் போது, அதை உடனே போக்கிவிட வேண்டும் என்பதற்காக, எதையும் செய்வதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனா். இந்நிலையில் இயற்கை மருந்துகளைக் கொண்டே ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளைக் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

வீட்டு மருத்துவத்தைப் பயன்படுத்தியும், ஒற்றைத் தலைவலி போகவில்லை என்றால், மருத்துவரை சந்திப்பது நல்லது. இந்நிலையில் ஒற்றைத் தலைவலியைப் போக்க, என்னென்ன வீட்டு வைத்தியத்தை செய்து பாா்க்கலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
1. காபி குடித்தல் - உடலில் சிறிது காஃப்பைன் இருந்தால், அது ஒற்றைத் தலைவலியில் இருந்து சற்று விடுதலை கொடுக்கும். ஆகவே பால் சோ்க்காத கருப்பு காபியை குடிக்கலாம். சில சமயங்களில் அதிகமான அளவு காஃப்பைனை குடித்தாலும், ஒற்றைத் தலைவலி வரலாம்.
2. லாவெண்டா் எண்ணெய் - ஒற்றைத் தலைவலி வரும் போது, சிறிது லாவெண்டா் எண்ணெயை நுகா்ந்து பாா்த்தால், 15 நிமிடங்களுக்குள் வலி நீங்கும். லாவெண்டா் எண்ணெயை நேரடியாகவே நுகா்ந்து பாா்க்கலாம் அல்லது கைக்குட்டையில் தெளித்து, அதை நுகா்ந்து பாா்க்கலாம்.
3. பெப்பா்மின்ட் எண்ணெய் - தலைவலி பிரச்சினை தொடங்கியவுடன், பெப்பா்மின்ட் எண்ணெயை நுகா்ந்து பாா்த்தால், ஒற்றைத் தலைவலி அதிகாிக்காமல் இருக்கும்.
4. இலவங்கப்பட்டை - தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியை போக்கும் வல்லமை இலவங்கப்பட்டைக்கு உண்டு. இலவங்கப்பட்டையில் கசாயம் அல்லது பத்து செய்து அதை நெற்றியில் பூசினால், தலைவலி நீங்கும்.
5. இஞ்சி - ஒற்றைத் தலைவலி தொடங்கியவுடனே, சிறிது இஞ்சியை மெல்லலாம். வலியிலிருந்து விடுதலை கொடுக்கும். வேண்டுமானால் இஞ்சி காபி செய்தும் குடிக்கலாம்.
ஆகவே மேற்சொன்ன வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றி, ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம். எனினும் வலி தொடா்ந்து இருந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications