Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பிரசவ வலி போக்கும் அபின்
இந்திய உணவுப் பொருட்களில் கசகசா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது மார்ஃபைன் மருந்திற்காக உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கசகசா செடியின் மலர்கள், காய், விதை மற்றும் விதை எண்ணெய் போன்றவை மருத்துவ பயன் உடைய பகுதிகளாகும்.
மரபு மருத்துவத்தில் அபின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 4000 ஆண்டுகளாக பயிரிடப்படும் மருந்து தாவரமாகும். அரேபியர்களால் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. சீனாவில் 7- ம் நூற்றாண்டுக்குப் பின்னரும், ஜப்பானில் 15 - ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் அபின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
அபினில் காணப்படும் அல்கலாய்டுகள் மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதில் மார்ஃபைன், கொடைன், தியபெயின், நார்கோடைன், பெப்பருவரைன், போன்ற பல செயல் ஊக்கப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
அபின், ஓபியம்
கசகசா செடியின் காய்களின் மீது கூரிய கத்தி கொண்டு மேலிருந்து கீழாக கீறல்கள் போடப்படும் பொழுது லேடக்ஸ் சுரந்து வெயிலில் கட்டி, பிசின் போன்று மாறும். இதுவே அபின் - ஓபியம் எனப்படுகின்றது. தாவரத்தில் மலர், காய் ஆகியவற்றில் இருந்து அபின் கிடைக்கிறது. விதைகளின் காணப்படுவதில்லை.
பலவிதமான மருந்து தயாரிப்புகளிலும் அபின் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஆல்கலாய்டுகளான பைன் மற்றும் கொடைன் ஆகியவை தூக்கத்தை தூண்டுபவைகளாகவும், வலிபோக்குவிகளாகவும் செயல்படுகின்றன. அதிக அளவு உட்கொண்டால் விஷமாகும். இது தடை செய்யப்பட்ட தாவரமாகும்.
வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும்
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எற்படும் உடல் சோர்வினை போக்கும். கொதிக்கும் நீரில் சிறிது அபின் கலந்து ஆவி பிடித்தால் மூச்சடைப்பு, சளி போக்கும். கற்பூரத்துடன் சம அளவு கலந்த கலவை சுளுக்கு வலி போக்க வல்லது.
பிரசவகால வலி போக்கும்
அபினில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மார்ஃபியா சக்தி மிகுந்த மருந்தாகும். உரிய அளவில் ஊசி மூலம் செலுத்தினால் வலி போக்கி தூக்கம் வரும். பிரசவ கால வலியை போக்கும் மருந்தாக இது செயல்படுகிறது. கருப்பை வலி மற்றும் கற்பூரம் கலந்த லினிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக் களியில் அபின் சாராயக் கரைசலை தெளித்து அடிவயிற்றில் பற்றாக கட்டும் பொழுது கருப்பை தொல்லைகள் நீங்குவதாக கருதப்பட்டது.
கற்பூரம் கலந்து தயாரித்த மேற்பூச்சுச் தைலம் கழுத்துப் பிடிப்பு, நரம்பு வலி, மூட்டுவலி, முதுகுவலி, போன்றவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும்.
போதை மருந்து
தொடக்க காலத்தில் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட அபின் பின்னர் போதைப் பொருளாக உட்கொள்ளப்பட்டது. இப்பழக்கம் பெர்சியாவில் தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. போதைப் பொருள் சந்தையில் ஓபியம் மற்றம் ஹெராயின் பிரபலமாக உள்ள ஆல்கலாய்டுகளாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications