Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
பிரசவ வலி போக்கும் அபின்
இந்திய உணவுப் பொருட்களில் கசகசா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது மார்ஃபைன் மருந்திற்காக உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கசகசா செடியின் மலர்கள், காய், விதை மற்றும் விதை எண்ணெய் போன்றவை மருத்துவ பயன் உடைய பகுதிகளாகும்.
மரபு மருத்துவத்தில் அபின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 4000 ஆண்டுகளாக பயிரிடப்படும் மருந்து தாவரமாகும். அரேபியர்களால் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. சீனாவில் 7- ம் நூற்றாண்டுக்குப் பின்னரும், ஜப்பானில் 15 - ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் அபின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
அபினில் காணப்படும் அல்கலாய்டுகள் மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதில் மார்ஃபைன், கொடைன், தியபெயின், நார்கோடைன், பெப்பருவரைன், போன்ற பல செயல் ஊக்கப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
அபின், ஓபியம்
கசகசா செடியின் காய்களின் மீது கூரிய கத்தி கொண்டு மேலிருந்து கீழாக கீறல்கள் போடப்படும் பொழுது லேடக்ஸ் சுரந்து வெயிலில் கட்டி, பிசின் போன்று மாறும். இதுவே அபின் - ஓபியம் எனப்படுகின்றது. தாவரத்தில் மலர், காய் ஆகியவற்றில் இருந்து அபின் கிடைக்கிறது. விதைகளின் காணப்படுவதில்லை.
பலவிதமான மருந்து தயாரிப்புகளிலும் அபின் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஆல்கலாய்டுகளான பைன் மற்றும் கொடைன் ஆகியவை தூக்கத்தை தூண்டுபவைகளாகவும், வலிபோக்குவிகளாகவும் செயல்படுகின்றன. அதிக அளவு உட்கொண்டால் விஷமாகும். இது தடை செய்யப்பட்ட தாவரமாகும்.
வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும்
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எற்படும் உடல் சோர்வினை போக்கும். கொதிக்கும் நீரில் சிறிது அபின் கலந்து ஆவி பிடித்தால் மூச்சடைப்பு, சளி போக்கும். கற்பூரத்துடன் சம அளவு கலந்த கலவை சுளுக்கு வலி போக்க வல்லது.
பிரசவகால வலி போக்கும்
அபினில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மார்ஃபியா சக்தி மிகுந்த மருந்தாகும். உரிய அளவில் ஊசி மூலம் செலுத்தினால் வலி போக்கி தூக்கம் வரும். பிரசவ கால வலியை போக்கும் மருந்தாக இது செயல்படுகிறது. கருப்பை வலி மற்றும் கற்பூரம் கலந்த லினிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக் களியில் அபின் சாராயக் கரைசலை தெளித்து அடிவயிற்றில் பற்றாக கட்டும் பொழுது கருப்பை தொல்லைகள் நீங்குவதாக கருதப்பட்டது.
கற்பூரம் கலந்து தயாரித்த மேற்பூச்சுச் தைலம் கழுத்துப் பிடிப்பு, நரம்பு வலி, மூட்டுவலி, முதுகுவலி, போன்றவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும்.
போதை மருந்து
தொடக்க காலத்தில் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட அபின் பின்னர் போதைப் பொருளாக உட்கொள்ளப்பட்டது. இப்பழக்கம் பெர்சியாவில் தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. போதைப் பொருள் சந்தையில் ஓபியம் மற்றம் ஹெராயின் பிரபலமாக உள்ள ஆல்கலாய்டுகளாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











