Just In
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 9 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மெனோபாஸ் சிக்கல்கள் தீர்க்கும் அப்ரமாஞ்சி
அப்ரமாஞ்சி தாவரத்தின் பேரினப்பெயர் லத்தின் மொழியில் ' நலம் தருவது' என்னும் பொருள் கொண்டதாகும். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த டயஸ் கொரிடிஸ் இத்தாவரத்தினைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், இத்தாவரத்தின் மருத்துவ குணங்களை உறுதிப்படுத்தியுள்ளன. 1952 -ம் ஆண்டில் தாவர மருந்துகள் பற்றிய நூலினை வெளியிட்டவர் ஃபெரியஸ் காலுமினா. இவர் தனக்கிருந்த வலிப்பு நோயினை இத்தாவரத்தின் மூலம் குணப்படுத்திக் கொண்டதாக இந்நூலில் தெரிவித்துள்ளார்.
அப்ரமாஞ்சி தாவரம் ஈரமான இடங்களில் இயற்கையாக வளரும். வடக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த இந்த தாவரம் மருந்திற்காக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பயிரிடப்படுகிறது. மேற்கு இமாலயத்திலும், காஷ்மீரிலும் 2400 - 2700 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. விதைகள் மூலம் வசந்த காலத்தில் பயிரிடப்படும் இத்தாவரத்தின் தரையடித்தண்டு 2 ஆண்டுகளுக்குப்பிறகு இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. போர்னைல் அசிடேட், பீட்டர் கேரிபில்லின், இரிடாய்டுகள், வெலிபோட்டிரியேட்கள், வால்டிரேட், ஐசோவால்டிரேட் மற்றும் ஆல்கலாய்டுகள், ஆகியவை உள்ளன. இவை மருத்துவ குணங்களின் அடிப்படையாகும்.
மனநோய் போக்கும்
தரையடித்தண்டு மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் உடையவை. தரையடித்தண்டும் வேரும் இணைந்து வெலிரியன் என்னும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை தூக்கத்தை தூண்டும். தசையிறுக்கத்தை தளர்த்தி சுகமளிக்கும். படபடப்பு மற்றும் வலியுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மைய நரம்பு மண்டலத்தின் மீது செயல்புரிகிறது. அஜீரணம் போக்கும். வலுவேற்றியாகவும் செயல்படுகிறது. செயல்தூண்டுவி, காய்ச்சல், மனஇறுக்கம், மனநோய், நரம்பு தளர்ச்சி, பயஉணர்வு முதலியவற்றில் மருந்தாகப் பயன்படுகிறது.
மெனோபாஸ் சிக்கல்கள் தீரும்
இமாலயப்பகுதிகளில் வளரும் V.Walichi என்னும் சிற்றினம் வெலிரியன் போன்றே பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவில் V.Capensis என்னும் சிற்றினம் வலிப்புநோய் மற்றும் மனநோய் தீர்க்கப் பயன்படுகிறது.
சீனா மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் V.hardwickil தசைப்பிடிப்பு நோய்களுக்கு மருந்தாகிறது. வட அமெரிக்காவில் உள்ள மினோமினி பழங்குடியினர் V.Ulginosa என்னும் சிற்றினத்தின் மருத்துவப் பயன் அறிந்துள்ளனர். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கால சிக்கல்களை குணப்படுத்த இத்தாவரத்தினை பயன்படுத்துகின்றனர்.