Just In
- 58 min ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தோல் நோய்களை குணமாக்கும் தாமரைக்கிழங்கு
அடங்கியுள்ள சத்துக்கள்
தாமரைக்கிழங்கில் வைட்டமின் சியும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடென்டலும் உள்ளது. இதில் உள்ள பி - 6 வைட்டமின் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தேவையற்ற டென்சன் அதன்மூலம் ஏற்படும் தலைவலியை போக்குகிறது. மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
தாமரைக்கிழங்கில் காப்பர், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. தாமரைக்கிழங்கானது இனிப்பு மிக்கது. உடலில் சோடியம் , பொட்டாசியம் நிலையை 1:4 என்ற நிலையில் தக்க வைத்திருக்கும்.
இதயநோய் தீர்க்கும்
இருதயம் தொடர்புடைய நோய்களையும் போக்க வல்லது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இருதயத்திற்கு பலத்தை உண்டாக்கும். இந்த கிழங்கை நன்றாக உலர்த்தி, இடித்து சலித்து சூரணமாக்கி கொள்ள வேண்டும். கொஞ்சம் தூளை எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகி இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும். தேன் கிடைக்கவில்லை என்றால் தாமரைக்கிழங்கு சூரணத்துடன் சிறிது சர்க்கரையைச் சேர்த்தும் சாப்பிடலாம். காலை மாலை இருவேளை சாப்பிட நோய்கள் நீங்கும்.
பித்தநோய் கட்டுப்படும்
நெஞ்சில் கபம், காசநோய், போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிறிதளவு தாமரைக்கிழங்கு தூளுடன் இஞ்சிச்சாற்றைக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட கபம் கரையும், காசநோய் குறையும். இது எளிய வைத்தியமுறையாகும். இந்த தூளை காய்ச்சிய பசும்பாலில் கலந்தும் தாரளமாகச் சாப்பிடலாம். அதற்குரிய மருத்துவ குணத்தில் மாற்றம் இருக்காது. பித்தம் தொடர்புடைய தொல்லைகளும் நீங்கும். வயிற்றுவலி, பொறுமல் போன்றவையும் சமனப்படும்.
தோல் நோய்கள் குணமடையும்
தாமரைக்கிழங்கு தூளைக்கொண்டு கஷாயம் இறக்கலாம். இத்தூளில் கொஞ்சம் நீருடன், கலந்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி உள்ளுக்குள் சாப்பிடலாம். இரத்தம் சுத்தமாகும். இத்துடன் தோல் தொடர்புடைய சொறி, சிரங்கு, தேமல் போன்றவையும் குணமடையும். இந்த கஷாயத்தோடு நல்லெண்ணெய்ச் சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சி வடிகட்டி அதை தலைக்குத் தேய்த்து குளிக்கலாம். பித்தம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். தலைவலி போகும். கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லது.