Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோடைகாலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க... இந்த மூலிகை பொருட்கள சாப்பிட்டா போதுமாம்!
பொதுவாக பருவநிலை மாறும்போது, மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆதலால், நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதனுடன், வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, சளி, வயிற்றில் தொற்று மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வரத் தொடங்கலாம். ஆனால் வீட்டு வைத்தியம் மூலம் வைரஸ் தொற்று பிரச்சனைகளை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பண்டைய காலம் முதல் இன்று வரை வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய மூலிகைகளின் உதவியுடன், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம் மற்றும் வைரஸ் தொற்றுகளைத் தவிர்க்கலாம். இந்த கட்டுரையில், வைரஸ் தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் மூலிகை வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
அஸ்வகந்தா
ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை அஸ்வகந்தா. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இவை, பெரும்பாலும் அடாப்டோஜனாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவுவதோடு, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.
வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளன. அஸ்வகந்தாவை தூள் வடிவிலும் பயன்படுத்தலாம். அஸ்வகந்தா தூளை ஒரு கிளாஸ் பாலுடன் கலந்து இரவில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கு( உலர்ந்த இஞ்சி)
உலர்ந்த இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க நன்றாக வேலை செய்கிறது. இதில் வைட்டமின் ஏ, சோடியம், இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதாக அறியப்படுகிறது. இது உங்களை உள்ளிருந்து வலிமையாக்குகிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
மேலும், உலர்ந்த இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகோல்ஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் சில வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட அவை உதவக்கூடும்.
அர்ஜுன் பட்டை
டெர்மினாலியா அர்ஜுனா என்றும் அழைக்கப்படும் அர்ஜுன் பட்டை, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும். அர்ஜுன் மரத்தின் பட்டை அதன் மருத்துவ குணங்களுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
அர்ஜுனா பட்டையில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இதனுடன், சளி, காய்ச்சல், உடல் வலி மற்றும் தொற்று போன்ற வைரஸ் தொற்று அறிகுறிகளை போக்கவும் உதவுகிறது.
மஞ்சள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலா மஞ்சள் ஆகும். ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதன் மருத்துவ குணங்களுக்காக பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
குர்குமின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கும் மஞ்சள், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் சில வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட இது உதவும். சூடான பாலுடன் மஞ்சளை கலந்து குடிப்பதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடல் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

