Latest Updates
-
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா?
கோடைகாலத்தில் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க... இந்த மூலிகை பொருட்கள சாப்பிட்டா போதுமாம்!
பொதுவாக பருவநிலை மாறும்போது, மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆதலால், நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நேரத்தில் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதனுடன், வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, சளி, வயிற்றில் தொற்று மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வரத் தொடங்கலாம். ஆனால் வீட்டு வைத்தியம் மூலம் வைரஸ் தொற்று பிரச்சனைகளை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பண்டைய காலம் முதல் இன்று வரை வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய மூலிகைகளின் உதவியுடன், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம் மற்றும் வைரஸ் தொற்றுகளைத் தவிர்க்கலாம். இந்த கட்டுரையில், வைரஸ் தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் மூலிகை வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
அஸ்வகந்தா
ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை அஸ்வகந்தா. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இவை, பெரும்பாலும் அடாப்டோஜனாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவுவதோடு, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.
வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளன. அஸ்வகந்தாவை தூள் வடிவிலும் பயன்படுத்தலாம். அஸ்வகந்தா தூளை ஒரு கிளாஸ் பாலுடன் கலந்து இரவில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கு( உலர்ந்த இஞ்சி)
உலர்ந்த இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க நன்றாக வேலை செய்கிறது. இதில் வைட்டமின் ஏ, சோடியம், இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதாக அறியப்படுகிறது. இது உங்களை உள்ளிருந்து வலிமையாக்குகிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
மேலும், உலர்ந்த இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகோல்ஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் சில வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட அவை உதவக்கூடும்.
அர்ஜுன் பட்டை
டெர்மினாலியா அர்ஜுனா என்றும் அழைக்கப்படும் அர்ஜுன் பட்டை, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகையாகும். அர்ஜுன் மரத்தின் பட்டை அதன் மருத்துவ குணங்களுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
அர்ஜுனா பட்டையில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இதனுடன், சளி, காய்ச்சல், உடல் வலி மற்றும் தொற்று போன்ற வைரஸ் தொற்று அறிகுறிகளை போக்கவும் உதவுகிறது.
மஞ்சள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலா மஞ்சள் ஆகும். ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதன் மருத்துவ குணங்களுக்காக பல நூற்றாண்டுகளாக இது பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
குர்குமின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருக்கும் மஞ்சள், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் சில வகையான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட இது உதவும். சூடான பாலுடன் மஞ்சளை கலந்து குடிப்பதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடல் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

