Latest Updates
-
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா?
மார்பகப் புற்று நோயா இனி ஆபரேசன் இல்லா சிகிச்சை!

மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தையே நீக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
கேன்சர் வந்தால் எந்த உறுப்பில் கேன்சர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்சரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்சரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி என்று பெயர்.
புற்றுநோய் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதியில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்சரை குணப்படுத்தி விடலாம்.பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். கதிர்வீச்சினை (ரேடியேஷன்) சிறு சிறு குழாய்கள் மூலம் கேன்சர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர்வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர்.
இச்சிகிச்சை மார்பக கேன்சர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற புராஸ்டேட் கேன்சருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும். இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்-கேன்சர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.
குடும்பத்தில் தாய்க்கு மார்பகப்புற்றுநோய் இருந்து அந்த ஜீன் மகனுக்கு இருந்தாலும் இதற்கான வாய்ப்பு அதிகம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வந்தால் மிகச்சீக்கிரமாக வலுவாக வளரும்.
லட்சத்தில் ஒரு ஆணிற்கு மார்பக புற்றுநோய் வரலாம். அதனால் ஆண்களுக்கு பெண்களைக் காட்டிலும் மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணம் குழந்தை பருவத்தில் மார்பகம் வளர்ந்திருந்து அவர்கள் இளைஞர்களான பின்னும் மார்பக வளர்ச்சி குறையாமல் அப்படியே இருந்தாலும், இத்தகையானவர்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications