Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 8 உணவுகளை சாப்பிடுவதற்கு முன் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! ஏன் தெரியுமா?
எந்த வகை உணவாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு முன்னர் அதை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். நாம் கண்ட உணவுகளை சாப்பிட்டால் பின்னர் வருவது மலச்சிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் முதலிய மோசமான பாதிப்புகள் தான். நமக்கு சில உணவுகள் பிடிக்கிறது என்பதற்காக அவற்றை சாப்பிட கூடாது.

அதுவும் தினமும் நாம் சாப்பிட கூடிய பாதி உணவுகள் மிக மோசமான பாதிப்பை ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தருகிறதாம். காலை முதல் இரவு தூங்கும் முன் வரை நாம் சாப்பிடும் உணவு பழக்கம் நமது மூளையை பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும்.
பலருக்கு மன அழுத்தம், மன நிம்மதியற்று போகுதல், உயர் இரத்த அழுத்தம் போன்ற பலவித பாதிப்புகள் உண்டாகும். இனி எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

உப்பு
பலருக்கு உப்பு அதிகம் சேர்த்த உணவுகள் என்றால் கொள்ளை பிரியம். ஆனால், இது போன்ற உணவுகளில் அதிக சோடியம் சேர்த்திருப்பதால் நமது மூளையின் இயக்கத்தை தான் முதலில் பாதிக்கும். இவற்றால் உங்களது நிம்மதி கெட்டு, தலைவலி, மன அழுத்தம் ஆகிய பாதிப்புகள் உண்டாகுமாம்.

கேன் சூப்ஸ்
கடைகளில் கேனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சூப்களை மிகவும் விரும்பி சாப்பிடுவோம். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது போன்ற உணவுகளில் அதிக அளவில் bisphenol-A என்கிற வேதி பொருள் சேர்க்கப்பட்டிருக்கும்.
இவை நேரடியாக உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.

வேர்க்கடலை
நாம் சாதாரணமாக சாப்பிடும் வேர்கடலைக்கும், அதிக உப்பு சேர்க்கப்பட்டு பாக்கெட்டுகளில் விற்கும் வேர்கடலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இது போன்ற வேர்கடலைகளில் அதிக அளவில் உப்பு போன்ற அஜினோமோட்டோ-வை அதிக அளவில் சேர்த்திருப்பதால் இவை நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

பிஸ்கட்ஸ்
சுவைமிக்க இந்த பிஸ்கட்ஸ்களை யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சர்க்கரைகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் முதலியவை மன அழுத்தம், மோசமான மன நிலையை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆதலால், இதை தவிர்ப்பது சிறந்தது.

சிப்ஸ்
சிப்ஸ் வகை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் பிடிக்கும். ஆனால், சிப்ஸ்களை சாப்பிட தொடங்கினால் மேலும் மேலும் சாப்பிட தூண்டும். ஆகையால் இவை உடல் பருமன், பசியின்மை, கொலஸ்ட்ராலை அதிகரித்தல் முதலிய தாக்கத்தை உண்டாக்க கூடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பொதுவாக பதப்படுத்தப்ட்ட உணவுகளில் எக்கசக்க நச்சு கலந்த பொருட்கள் சேர்ந்திருக்கும். இவற்றை சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் சுலபமாக பாதிக்கப்படும். எனவே, இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிக சர்க்கரை
கடைகளில் விற்கப்படும் பாட்டில் ஜுஸ்களில் பலவித அபாயகர வேதிகள் சேர்த்துள்ளனர். இவற்றை நாம் தெரிந்த குடித்தால் மரண வாசலுக்கான டிக்கெட் மிக சுலபமாக கிடைத்து விடும் என்பதே உண்மை. எனவே, கட்டாயம் இந்த வகை உணவுகளை சாப்பிட கூடாது.

மது
மூளையை நேரடியாக பாதிக்கும் பழக்கத்தில் முதல் இடத்தில் இருப்பது மது அருந்துவதால் ஏற்படும் கேடுகளை அடுக்கி வைத்தாலும் இதை உணர்ந்த பாடில்லை. இந்த பழக்கத்தால் மன அழுத்தம் அதிகரித்து, எரிச்சல், கோபம் போன்றவை தான் உண்டாகும் என ஆய்வுகளும் சொல்கின்றன.



Click it and Unblock the Notifications











