Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மாதவிலக்கு கோளாறை குணப்படுத்தும் ஒரு மூலிகை சூப் !!
மாதவிலக்கு சீரில்லாமல் இருந்தால் பின்னால் பாதிப்பை உண்டாக்கும். அதனை குணப்படுத்த இங்கே சொல்லிப்பட்ட முறையில் மூலிகை சூப் தயாரித்து அதனை உட்கொண்டால் இந்த பிரச்சனை சரியாகும். நன்மை பெறலாம்.
மாத விலக்கு முறையற்று வந்தால் உடலில் ஹார்மோன் பிரச்சனை உண்டாகியிருக்கிறது என்று அர்த்தம். அதனை ஆரம்ப காலக்கட்டத்திலேயே குணப்படுத்துவது நல்லது.
ஈஸ்ட்ரோஜன் சரியாக தூண்டப்படாமல் இருப்பதால் அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகலாம்.
அதோடு சாப்பிடும் ரசாயனம் மிகுந்த கேடு தரும் ஜங்க் உணவுகளும் மாதவிடாய் சீரற்று இருப்பதற்கு காரணம். உடனடியாக மருத்துவரை ஆலோசித்து தகுந்த காரணத்தை கண்டுபிடிக்கலாம்.

முக்கியமாக நமது இயற்கை மூலிகை நிறைந்த காய்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. டெங்குவிற்கு வேம்பு பப்பாளி மருந்தாவதைப் போல், மாதவிடாய் கோளாறுகளுக்கும் நமது பாரம்பரிய இயற்கை வைத்திய முறைகள் உண்டு.

தேவையானவை :
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்

செய்முறை :
மணத்தக்களியையும், வெங்காயம், மற்றும் பூண்டையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு நீரை எடுத்து அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்து நறுக்கி வைத்தவைகளையும் போட்டு சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வையுங்கள்.
20 நிமிடங்கள் பிறகு ஆற வைத்து வடிகட்டி சூப் போல குடிக்க வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும் :
தினமும் காலை மாலை என சாப்பிட்ட பின்போ, முன்போ உங்கல் விருப்பப்படி இருவேளை குடியுங்கள். மாதவிடாய் நெருங்கும் போது 10 நாட்கள் தொடர்ந்து குடியுங்கள். இவ்வாறு மூன்று மாதங்கள் குடித்தால் மாத விடாய் சீராகும்.

அனைவரும் குடிக்கலாம் :
இதனை மற்ற பெண்களும் சாப்பிடலாம். இதனால் உடல் பலம் பெறும். கர்ப்பப்பை வலுப்பெறும். ரத்த சுத்தகரிப்பு, நல்ல நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











