Latest Updates
-
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
மாதவிலக்கு கோளாறை குணப்படுத்தும் ஒரு மூலிகை சூப் !!
மாதவிலக்கு சீரில்லாமல் இருந்தால் பின்னால் பாதிப்பை உண்டாக்கும். அதனை குணப்படுத்த இங்கே சொல்லிப்பட்ட முறையில் மூலிகை சூப் தயாரித்து அதனை உட்கொண்டால் இந்த பிரச்சனை சரியாகும். நன்மை பெறலாம்.
மாத விலக்கு முறையற்று வந்தால் உடலில் ஹார்மோன் பிரச்சனை உண்டாகியிருக்கிறது என்று அர்த்தம். அதனை ஆரம்ப காலக்கட்டத்திலேயே குணப்படுத்துவது நல்லது.
ஈஸ்ட்ரோஜன் சரியாக தூண்டப்படாமல் இருப்பதால் அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகலாம்.
அதோடு சாப்பிடும் ரசாயனம் மிகுந்த கேடு தரும் ஜங்க் உணவுகளும் மாதவிடாய் சீரற்று இருப்பதற்கு காரணம். உடனடியாக மருத்துவரை ஆலோசித்து தகுந்த காரணத்தை கண்டுபிடிக்கலாம்.

முக்கியமாக நமது இயற்கை மூலிகை நிறைந்த காய்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. டெங்குவிற்கு வேம்பு பப்பாளி மருந்தாவதைப் போல், மாதவிடாய் கோளாறுகளுக்கும் நமது பாரம்பரிய இயற்கை வைத்திய முறைகள் உண்டு.

தேவையானவை :
மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்

செய்முறை :
மணத்தக்களியையும், வெங்காயம், மற்றும் பூண்டையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு நீரை எடுத்து அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்து நறுக்கி வைத்தவைகளையும் போட்டு சிறிது உப்பும் சேர்த்து கொதிக்க வையுங்கள்.
20 நிமிடங்கள் பிறகு ஆற வைத்து வடிகட்டி சூப் போல குடிக்க வேண்டும்.

எப்போது சாப்பிட வேண்டும் :
தினமும் காலை மாலை என சாப்பிட்ட பின்போ, முன்போ உங்கல் விருப்பப்படி இருவேளை குடியுங்கள். மாதவிடாய் நெருங்கும் போது 10 நாட்கள் தொடர்ந்து குடியுங்கள். இவ்வாறு மூன்று மாதங்கள் குடித்தால் மாத விடாய் சீராகும்.

அனைவரும் குடிக்கலாம் :
இதனை மற்ற பெண்களும் சாப்பிடலாம். இதனால் உடல் பலம் பெறும். கர்ப்பப்பை வலுப்பெறும். ரத்த சுத்தகரிப்பு, நல்ல நினைவாற்றல் ஆகியவை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications