Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய காய் இது தெரியுமா !!
பாவற்காயின் குணம்தான் கசப்பு. ஆனால் பலனோ மிகப்பரியது. அதன் நன்மைகளை தெரிந்தால் வியந்து போவீர்கள்.
பாவக்காய் கொடி வகையை சேர்ந்தது. வாரம் ஒரு நாள் சாப்பிடுவதால் வயிற்றில் புழு பூச்சிகள் அழிந்து விடும். கொழுப்பு குறையும். குளுகோஸ் அளவு கட்டுப்படும்.

பாகற்காய் விஷத்தை முறிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது. அதன் நன்மைகளையும் மருத்துவ குணங்களைப் பற்றியும் இந்த கட்டுரையை தெரிந்து கொள்ளுங்கள்.

விஷக் காய்ச்சல் நிற்க :
பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.

நாய்கடிக்கு மருந்து :
பாகற்காயின் இலையை பறித்து அரைத்து உடல் முழுவதும் தடவி குளித்தால் நாய்க்கடியின் விஷம் பரவாது.

மாலைக் கண் நோய்க்கு :
ஒரு பிடி பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து அரைத்து கண்களைச் சுற்றிலும் பற்று போட்டால் மாலைக் கண் நோயுள்ளவர்களுக்கு கண்பார்வையை நீட்டிக்கச் செய்யலாம்.

சர்க்கரை வியாதிக்கு :
தினமும் பாகற்காயின் இலைச் சாற்றில் ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற :
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
பாகற்காயை தினமும் அரை வேக்காட்டில் வேக வைத்து அதிலிருந்து சாறை எடுத்து குடித்து வந்தால் வயிற்றிலிருக்கும் பூச்சியை அழித்துவிடும்.

சரும வியாதிக்கு :
பாகற்காயி இலையின் சாறெடுத்து அதனை சருமத்தில் தடவி வந்தால் சொறி சிரங்கு போன்ற சரும வியாதிகள் குணமாகும்.

கல்லீரல் பாதிப்புகளுக்கு :
அஜீரணம் மற்றும் இரைப்பை சம்பந்தமான பிரச்சனைகளை போக்குகிறது. பாகற்காயின் இலையை நீரில் கொதிக்க வைத்து அதன் சாறை பிழிந்து அதனை குடித்து வந்தால் இரைப்பை சம்பந்த நோய்கள் குணமாகும்.

ரத்தம் சுத்தமாக :
ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நச்சுக்கள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும்.



Click it and Unblock the Notifications