Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சந்தோஷமா வாழனுமா? அப்போ பழம் காய்களை அதிகம் சாப்பிடுங்க - புதிய ஆய்வு
பழங்கள் காய்கறிகளை சாப்பிடுங்க என்று கூவாத குறையாக எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்களை மகிழ்ச்சியுடன் வாழவக்கிறது. இது புதிய ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் , பழங்கள் மற்றும் காய்களை பற்றி நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 12, 385 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வு சுமார் இரு வருடங்களில் நடந்தது.

இவர்களில் பழம் காய்கறிகள் அதிகம் சாப்பிடாதவர்களுக்கு , ஒரு நாளைக்கு உணவில் 8 பங்கு அதிகமாக பழங்களும், காய்கறிகளும் அளிக்கப்பட்டன.
ஆய்வின் இறுதியில் அவர்களுக்கு வாழ்வில் போதுமான பிடிப்பும், மகிழ்ச்சியும் அதிகரித்ததாக கூறினர். இவற்றை சாப்பிடுவதற்கு முன் திருப்தியின்மை இருந்ததாகவும், இப்போது அந்த பிரச்சனை இல்லை எனவும் கூறியிருக்கின்றனர்.
எல்லாவித நிறங்களைக் கொண்ட பழங்களையும் காய்கறிகளையும் உண்டால், மகிழ்ச்சியை சுரக்கச் செய்யும் ஹார்மோன்கள் நன்றாக தூண்டி, வாழ்வில் நிம்மதியை தருவதாக வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆஸ்வால்ட் கூறியுள்ளார்.
இவற்றை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு, மன நலத்தையும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைக்கிறது என்று மேலும் கூறுகிறார்.
இந்த அவசர காலத்தில் பழங்களையும், காய்கறிகளையும் அதிகம் சாப்பிடாததால்தான் திருப்தியின்மையில் மனிதன் ஓடிக் கொண்டிருக்கிறான். இதனால் மன அழுத்தம், போராட்டம் , ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது என்று பப்ளிக் ஹெல்த் என்ற அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், உங்கள் அன்றாட உணவில் 80 சதவீதம் காய்களும், பழங்களும் இருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை கிடைப்பது உறுதி .
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


