Latest Updates
-
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
களாக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சிறுவயதில் நாம் மிகவும் விரும்பி சாப்பிட்ட களாக்காயில் எவ்வளவோ ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ மகத்துவம் கொண்டுள்ளது களாக்காய்.
"நாளை கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காய் பெரியது" என்பது பழமொழி. இந்த பழமொழியை எங்கள் பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் அடிக்கடி கூறுவார். அளவு என்ற கணக்கில் சிறியதாக இருப்பினும், மருத்துவ குணம் என்ற அளவில் களாக்காய் பெரியது தான்.

அன்றாடம் நமது உடலில் உண்டாகும் சின்ன, சின்ன கோளாறுகளுக்கு. நல்ல இயற்கை மருந்தாக விளங்குகிறது களாக்காய். இதை நாம் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே பார்த்திருக்க வாய்ப்பிருந்தது (இன்றும் இருக்கிறதா என தெரியவில்லை).
நாம் மறந்த, நம்மால் (நம்மைவிட்டு) மறைந்துக் கொண்டிருக்கும் மருத்துவ குணம் வாய்ந்த உணவுப் பொருட்களில் இதுவும் ஒன்று....

இரத்த சோகை!
களாக்காய் நிறைய தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் எ, சி, இரும்புசத்து இரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பசி, மயக்கம்!
களாக்காய் மந்தமான படி, பிரசவக் காலத்தில் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் வாந்தி, பித்த எரிச்சல், மயக்கம் போன்றவற்றை தடுக்க கூடியது ஆகும்.

பற்கள், ஈறுகள்!
பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை களாக்காய் தடுக்க கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் சி பசியை தூண்டும், ஈரலுக்கு வலிமை சேர்க்கும் மற்றும் மஞ்சள் காமாலை உண்டாகாமல் தடுக்கும்.

தாகம், நாவறட்சி!
களாக்காய் வேர்களை வைத்து அதி தாகம், நாவறட்சிக்கான அருமருந்தை தயார் செய்யலாம். இது தாகத்தையும், நாவறட்சியையும் போக்கக் கூடியது.

களாக்காய் மருந்து செய்முறை!
தேவையான பொருட்கள்:
களாக்காய் செடி வேர் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
செய்முறை!
சம அளவு களாக்காய் வேர் பொடி மற்றும் சர்க்கரை எடுத்துக் கொண்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும். இதை காலை, மாலை இருவேளை பால் அல்லது நீரில் கலந்து பருகி வரலாம் அல்லது அபப்டியே சாப்பிடலாம். இது நா வறட்சி, அதி தாகம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.



Click it and Unblock the Notifications











