Latest Updates
-
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
களாக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சிறுவயதில் நாம் மிகவும் விரும்பி சாப்பிட்ட களாக்காயில் எவ்வளவோ ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தும் மருத்துவ மகத்துவம் கொண்டுள்ளது களாக்காய்.
"நாளை கிடைக்கும் பலாக்காயை விட, இன்று கிடைக்கும் களாக்காய் பெரியது" என்பது பழமொழி. இந்த பழமொழியை எங்கள் பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் அடிக்கடி கூறுவார். அளவு என்ற கணக்கில் சிறியதாக இருப்பினும், மருத்துவ குணம் என்ற அளவில் களாக்காய் பெரியது தான்.

அன்றாடம் நமது உடலில் உண்டாகும் சின்ன, சின்ன கோளாறுகளுக்கு. நல்ல இயற்கை மருந்தாக விளங்குகிறது களாக்காய். இதை நாம் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே பார்த்திருக்க வாய்ப்பிருந்தது (இன்றும் இருக்கிறதா என தெரியவில்லை).
நாம் மறந்த, நம்மால் (நம்மைவிட்டு) மறைந்துக் கொண்டிருக்கும் மருத்துவ குணம் வாய்ந்த உணவுப் பொருட்களில் இதுவும் ஒன்று....

இரத்த சோகை!
களாக்காய் நிறைய தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் எ, சி, இரும்புசத்து இரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பசி, மயக்கம்!
களாக்காய் மந்தமான படி, பிரசவக் காலத்தில் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் வாந்தி, பித்த எரிச்சல், மயக்கம் போன்றவற்றை தடுக்க கூடியது ஆகும்.

பற்கள், ஈறுகள்!
பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை களாக்காய் தடுக்க கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் சி பசியை தூண்டும், ஈரலுக்கு வலிமை சேர்க்கும் மற்றும் மஞ்சள் காமாலை உண்டாகாமல் தடுக்கும்.

தாகம், நாவறட்சி!
களாக்காய் வேர்களை வைத்து அதி தாகம், நாவறட்சிக்கான அருமருந்தை தயார் செய்யலாம். இது தாகத்தையும், நாவறட்சியையும் போக்கக் கூடியது.

களாக்காய் மருந்து செய்முறை!
தேவையான பொருட்கள்:
களாக்காய் செடி வேர் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
செய்முறை!
சம அளவு களாக்காய் வேர் பொடி மற்றும் சர்க்கரை எடுத்துக் கொண்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும். இதை காலை, மாலை இருவேளை பால் அல்லது நீரில் கலந்து பருகி வரலாம் அல்லது அபப்டியே சாப்பிடலாம். இது நா வறட்சி, அதி தாகம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.



Click it and Unblock the Notifications