Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
அஜீரண கோளாறை குணபடுத்தும் அதோ முக ஸ்வனாசனா !!
வயிறு அடைத்தாற்போலிருந்தால் அல்லது வயிறு அசௌகரியமாக உணர்ந்தால் அது அஜீரணத்தின் அறிகுறியாகும். அதனை அப்படியே கவனிக்காமல் விட்டால் அது அசிடிட்டி, வாந்தி என உருவாக்கி கடைசியில் அல்சர் வரை கொண்டு போய் விடும்.
ஏனெனில் அஜீரணம் என்பது சாதரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நாள் ஏற்பட்டால் தவறில்லை. ஆனால் அடிக்கடி ஏற்பட்டால் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் அல்லது மருத்துவரை உடனடியாக சென்று கவனிக்க வேண்டும்.

உங்களுக்கு அடிக்கடி அஜீரணம் எற்படும்போது என்ன சாப்பிடுகிறீர்கள். காலம் தாழ்த்தி சாப்பிடுகிறீர்களா என பார்த்து சரிசெய்யுங்கள். அது தவிர யோகாவினால் உங்கள் அஜீரணப் பிரச்சனையை சரிப்படுத்தலாம். யோகா உங்கள் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். என்சைம்களின் சுரப்பை தூண்டும். இதனால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
அதோ முக ஸ்வனாசனா :
அதோ என்றால் முன்னோக்கி, முக என்றால் முகம், ஸ்வன என்றால் நாய். அதாவது நாயைப் போன்ற வடிவத்தில் இந்த ஆசனத்தை செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் இப்பெயர் பெற்றுள்ளது.
செய்முறை :
முதலில் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபின், கால் மற்றும் முட்டிகளை வளைக்காமல் குனியுங்கள்.
நேராக குனியாமல் சற்று முன்னோக்கி படத்தில் உள்ளவாறு குனிந்து உள்ளங்கைகளால் தரையை தொடுங்கள். கைகள் காதை மூடியவாறு வைக்க வேண்டும். உங்கள் கண்கள் வயிறை பார்த்தவாறு அமைய வேண்டும். நன்றாக ஆழ்ந்து மூச்சை வாங்கி விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள். இது போல் மூன்று முறை செய்யலாம்.
பலன்கள் :
தலைவலியை குணப்படுத்தும். தோள்பட்டை, கால்கள் வலிமை பெறும். ஜீரணம் அதிகரிக்கும். முதுகுத் தண்டு பலம் பெறும்.
குறிப்பு :
இரத்தக் கொதிப்பு, தோள்பட்டை காயம் உள்ளவரகள் இந்த யோகாவை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications














