இரவு கறந்த பசும் பால் நல்ல உறக்கத்தை தருகிறது: தென்கொரியா ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஆதிக் காலம் முதல் நாம் பசும்பாலும், ஆட்டுப் பாலும் குடித்து வந்துள்ளோம். பசும்பாலிலும், ஆட்டுப் பாலிலும் வெவ்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இதில் பெரும்பாலும் பசும்பால் தான் உபயோகப்படுத்தி வந்தனர் நமது முன்னோர்கள்.

பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பசும்பால் பருகுவதால், உடல் சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, எலும்புகளும் வலிமை பெறுகின்றன. மேலும், இரவு நேரங்களில் பால் குடிப்பது நல்ல உறக்கத்தை தரும் என கூறுவார்கள். ஆனால், சமீபத்திய ஆய்வொன்றில் இரவு கறந்த பசும்பால் ஆழ்ந்த உறக்கத்தை தரவல்லது என்று கண்டறிந்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம்

நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனம்

தென்கொரியாவின் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனமான உய்மியுங் (Uimyung) ஆய்வாளர்கள் தான் இரவில் கறக்கும் பசு மாட்டின் பால் உறக்கத்தை ஊக்குவிக்கிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.

டிரிப்டோபென் மற்றும் மெலடோனின்

டிரிப்டோபென் மற்றும் மெலடோனின்

ஆய்வின் போது உய்மியுங் ஆய்வாளர்கள் இரவு நேரத்தில் கறந்த பசும்பாலில் நிறைய டிரிப்டோபென் மற்றும் மெலடோனின் இருப்பதை கண்டறிந்தனர்.

மெலடோனின்

மெலடோனின்

மெலடோனின் இயற்கையாகவே உறக்க சுழற்சியை சீராக்கும் தன்மையைக் கொண்டதாகும். இது தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனை ஊக்குவிக்கிறது. இதனால், உங்களது உறக்க சுழற்சி முறை மேம்பட்டு, நல்ல உறக்கம் கிடைக்கிறது.

டிரிப்டோபென்

டிரிப்டோபென்

டிரிப்டோபென், செரோடோனின் மற்றும் மெலடோனின் மாற்றமைடைந்து இந்த பலனை தருகிறது என்றும் உய்மியுங் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறியுள்ளனர்.

ஆய்வுக் குழுவினர்

ஆய்வுக் குழுவினர்

பால் நீண்ட காலமாகவே உறக்கத்தை ஊக்குவிக்கும் உணவாக கருதப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இரவில் தாய்பால் தருவதால் அவர்கள் நிம்மதியான உறக்கத்தை பெறுகின்றனர். இதில், இரவு கறந்த பசும்பாலை பருகுவதால் உறக்கம் மேம்படுகிறது. எளிதாக ஆழ்ந்த உறக்கத்தை பெற முடிகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எலியை வைத்து ஆய்வு

எலியை வைத்து ஆய்வு

உய்மியுங் ஆய்வாளர்கள், தங்களின் ஆய்வின் போது எலியின் மீது பரிசோதனை செய்துள்ளனர். இதில் பகலில் கறந்த பாலைவிட, இரவு கறந்த பால் அதிகமான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இரட்டிப்பு மடங்கு உறக்கம்

இரட்டிப்பு மடங்கு உறக்கம்

பகலில் கறந்த பாலை பருகுவதை விட, இரட்டிப்பு மடங்கு உறக்கத்தை தரவல்லது இரவு கறந்த பால் என்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக கூறியுள்ளனர்.

உறக்கம் சார்ந்த பிரச்சனைகள் குறையும்

உறக்கம் சார்ந்த பிரச்சனைகள் குறையும்

மேலும் இந்த ஆய்வின் ஆசிரியர், "இரவுக் கறந்த பால், தூக்கமின்மை மற்றும் உறக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion