Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
அறுசுவை உணவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் - வியப்பூட்டும் தகவல்கள்!!!
பண்டையக் காலம் முதலே அறுசுவை உணவை நமது கலாச்சாரத்தில் பின்பற்றி வருகிறோம். இது மக்களின் வசதியை குறிப்பதற்காகவோ, பகட்டை வெளிப்படுத்தவோ உருவாக்கப்பட்ட முறை அல்ல. மனிதர்களின் ஆரோக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட முறை.
ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்!!
ஆனால், இன்று நாம் அதை அனைத்தையும் மறந்து, மேற்கத்தியம் என்ற பெயரில் எந்த சுவையும் இல்லாத, உடல் நலத்தை சீர்கெடுக்கும் உணவுகளை வீண் பகட்டிற்காக சாப்பிட்டு வருகிறோம்.
சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்தை தணிக்கும் காய்கறிகள்!!!
இதனால் தான் உடல் பருமன், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, மார்பக புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த பல நோய்கள் அதிகரித்து வருகிறது. இனி, நமது முன்னோர்கள் நமது உடல்நலத்தைப் பேணுவதற்காக உருவாக்கிய அறுசுவை உணவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்களைப் பற்றிப் பார்க்கலாம்...

காரம்
அளவானக் காரம் உணவில் சேர்த்துக் கொள்வதனால், உணர்சிகள் அதிகரிக்க உதவும். அதிகமானால் உடல் சூடு அதிகரிக்கும்.

கசப்பு
உடம்பிலுள்ள நச்சுக் கிருமிகளை அளிக்கவும், உடலின் சக்தியை அதிகரித்து உடற்திரனை அதிகரிக்கவும் கசப்பு உதவுகிறது.

இனிப்பு
இனிப்பு, உடலின் தசைகளை வளர்க்கும் தன்மை உடையது. அதிகப்படியான இனிப்பு வாதத்தைக் கூட்டும் என்றும் கூறப்படுகிறது.

புளிப்பு
இரத்தக் குழாயில் தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கவல்லது புளிப்பு.

துவர்ப்பு
துவர்ப்பு, இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது மற்றும் அதிகமானால் இரத்தம் உறைவதைக் கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு
உப்பு இன்றி எந்த சுவையையும் ருசிக்க முடியாது. இது, ஞாபகசக்தியை கூட்டும். அளவிற்கு அதிகமான உப்பு உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மையுடையது.

கருத்து
இவ்வளவு நன்மைகளை உடலுக்கு தரும் அறுசுவை உணவை ருசிப்பதை தவிர்த்து, கென்டக்கி சிக்கன், பிட்சா, பர்கர் என்று உடல் கொழுப்பை அதிகரித்து, உடல்நலக் குறைபாட்டை அதிகரிக்கும் உணவுகளை நாம் ருசித்து வருகிறோம்.



Click it and Unblock the Notifications