Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தாண்டு 'ஸ்பெஷல்' உணவு!

உணவும் அதிர்ஷ்டமும்
அதேபோல் பாரம்பரியமான உணவுகள் அதிர்ஷ்டம் தரும் என்ற நம்பிக்கை சில நாட்டு மக்களிடையே உள்ளது. டச்சுக்காரர்கள் புத்தாண்டு நாளன்று சத்தான உலர் பழங்களை உண்பது அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர்.
அமெரிக்கா நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தன்று காராமணி (Black-eyed peas) எனப்படும் பயறினை உணவாக சமைத்து உண்பது அதிர்ஷ்டம் தரும் என்று கூறுகின்றனர். அதோடு சிறிய ஆட்டின் கொழுப்பு, முட்டைக்கோஸ் போன்ற உணவையும் பாரம்பரியமாக உட்கொள்கின்றனர். முட்டைக்கோஸ் உணவானது அதிக செல்வத்தை தரும் என்பது அமெரிக்கர்களின் நம்பிக்கை. அதனால்தான் அவர்கள் முட்டைக்கோஸ் சேர்த்துக்கொள்கின்றனர்.
பூசணிக்காய் பச்சடி
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் புத்தாண்டு தினத்தன்று மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் ஏற்பட வேப்பம்பூ பச்சடி, செய்து உண்பது வழக்கமாக உள்ளது. அரிசி உணவும், பூசணிக்காய் பச்சடி, பச்சை மொச்சைக்குழம்பு செய்து உண்பது பாரம்பரியமாக உள்ளது
அதிர்ஷ்டம் தரும் ஒயின்
ரோமானியர்களும், கிரோக்கர்களும் ஒயின் அருந்தி தங்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடங்குகின்றனர். விருந்தின்போது தங்களின் விருந்தினர்களுக்கும், ஒயின் பரிமாறுவதை பாரம்பரியமாக கருதுகின்றனர். விஷத்தை போக்கும் மருந்தாக ஒயினை உட்கொள்கின்றனர்.
உண்ணக்கூடாத உணவுகள்
மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் நோய்களின் தாக்குதல் அதிகரிக்கிறது. எனவே சில உணவுகளை முடிந்தவரை இந்த ஆண்டில் இருந்து ஓரம் கட்டி வைப்பது உடல் நலத்திற்கு நன்மை தரும் அதுவே அதிர்ஷ்டம் என்கின்றனர் மருத்துவர்கள். அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், ஸ்வீட் வகைகள் போன்றவற்றை உண்பதை குறைக்கலாம். பட்டர், கிரீம், சீஸ், அதிகமாக எண்ணெயில் பொறித்த உணவுகள், அதிக காரம் நிறைந்த உணவுகள் அனைத்தையும் குறைக்கலாம். அதிகம் கேஸ் நிறைந்த குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த சிப்ஸ் வகைகள், டின்னில் வரும் உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ப்ரிட்ஜில் வெகுநாட்களுக்கு வைத்து அவற்றை சூடு செய்து சாப்பிடக்கூடாது.
சாலட் காய்கறிகள், பழங்கள்
தினசரி, காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறி சாலட்டில் மிளகு தூள், எலுமிச்சை சாறு, தக்காளி, கோஸ், கேரட், வெள்ளறிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடவும். மாதம் இருமுறை உண்ணாவிரதம் இருக்கலாம். அதில் வாரம் ஒருநாள் பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications