3 குழந்தைக்கு தாயாகியும் இவ்ளோ அழகா இருக்கறதுக்கு பீட்ரூட் டீ தான் காரணமாம். சும்மா ட்ரை பண்ணி பாருங

3 குழந்தைக்குப் பின்னும் மீரா கபூர் சிக்கென இருப்பதற்கான ரகசியம் பீட்ரூட் டீ தானாம். அதைப்பற்றிய இங்கு விளக்கப்பட்டுள்ளது.

By

மீரா கபூர் பீட்ரூட் டீ குடிக்கிறார்.. நாமும் ஏன் பீட்ரூட் டீ குடிக்கவேண்டும்? ஆச்சரியப்படுத்தும் 5 காரணங்கள் இதோ. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட், சமூக ஊடகங்களில் ஒரு பெரிய நட்க்ஷத்திரமாக விளங்குகிறார்.

health benefits of beetroot tea

இந்த அழகு தேவதையை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்பற்றுகின்றனர், அவரும் புகைப்படங்களை பகிர்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மீராவுக்கு ஷாஹிதுக்கும் மிஷா என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. இருவரும் தற்போது தங்கள் குடும்பத்திற்கு இன்னொரு குழந்தையை வரப்பேற்பதில் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீரா கபூர்

மீரா கபூர்

Image Courtesy

மீராவின் வளைகாப்பு சமீபத்தில் நடந்த போது தம்பதிகள் காதல் பார்வைகளையும், இதமான இணைப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். மீரா கபூர் தன்னுடைய ரசிகர்களையும், தன்னை பின் தொடர்பவர்களையும், தன் வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு தொடர்பில் வைத்துள்ளார். சமீபத்தில் தான் பீட்ரூட் தேநீர் குடிப்பதையும், நாம் அறிந்திராத அதன் சுவாரசியமான பலன்களையும் நம் ஆவலைத் தூண்டும் வகையில் பகிர்ந்துள்ளார். மீரா கபூர் ஒரு தேநீர் கூஜாவைக் காட்டி, தன்னுடைய 'குழந்தையை மிகவும் ஆரம்ப காலதிலேயே ஆரோக்கியமாக வைத்திருப்பது' என்கிறார்.

பீட்ரூட் டீ

பீட்ரூட் டீ

ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் கடினமானது அல்ல!' நிறைய பேர் பீட்ரூட் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது நாம் கேள்விப்படாத ஒன்று. ஆனால் சிறிதளவாவது அதைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம். உண்மையில் காபீன் இல்லாத தேநீர் கருவுற்றிருப்போருக்கும், குழைந்தையை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கும் மிகவும் நல்லது. ஆனால் இது அனைவருக்குமே மிகவும் நல்லது. தினமும் பீட்ரூட் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது பீட்ரூட்டில் உள்ள அணைத்து சத்துக்களையும் பெறலாம். மீரா கபூர் போல பீட்ரூட் தேநீர் பருக நான்கு காரணங்களைப் பார்ப்போம்.

டாக்சின் வெளியேற்றம்

டாக்சின் வெளியேற்றம்

இயற்கையான நச்சு நீக்கி: பீட்ரூட்டில் பீட்டலைன் எனப்படும் தாவர ஊட்டச்சத்துகள் அபரிமிதமாக உள்ளது. இது சக்தி வாய்ந்த நச்சு நீக்கி, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. அதனால் நம் உடம்பில் சேரும் கழிவுகளை இயற்கையான முறையில் விரைவாக நீக்குகிறது.

ரத்த சோகை

ரத்த சோகை

ரத்த சோகை வராமல் தடுக்கிறது. பீட்ரூட் தேநீர் நெல்லிக்காய் பொடி சிறிதளவு சேர்த்துப் பருகும் போது ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் ரத்தசோகை மற்றும் இரும்புசத்துக் குறைபாடு வராமல் பாதுகாக்கிறது.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. நைட்ரைட் சத்து பீட்ரூட்டில் அதிக அளவில் உள்ளது. இது இயற்கையான முறையில் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, ரத்தக் குழாய்களில் உள்ள நைட்ரிக் அமிலத்தை அதிகரித்து, நிறைய ஆக்ஸிஜனை மூளைக்கும், இதயம், தசைகளுக்கும் கொண்டு செல்கிறது.

சரும அழகு

சரும அழகு

சருமத்திற்கு மிகவும் நல்லது : பீட்ரூட் ரத்தத்தை இயற்கையாக சுத்தப்படுத்துவதால் அது உங்கள் சருமத்தை இயற்கையாக மிளிரச் செய்யும். பீட்ரூட் தேநீரில் வைட்டமின் C நிறைந்து உள்ளதால் சருமத்தில் உள்ள திட்டுகளையும், கருமைகளையும் போக்குகிறது.

ஜீரண சக்தி

ஜீரண சக்தி

ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: பீட்ரூட்டில் பீட்டைன் உள்ளதால் ஜீரண சக்தியை தூண்டுகிறது. பீட்டைன் வயிற்றில் தேவையான அமிலத்தை அதிகமாக சுரப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இப்போது நீங்கள்பீட்ரூட் தேநீர் பற்றி தெரிந்து கொண்டீர்கள். நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே காபீன் இல்லாத சத்து நிறைந்த பீட்ரூட் தேநீரை சுவைத்து மகிழ விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது, அரை மூடி எலுமிச்சையை இரண்டு கப் கொதிக்கும் நீரில் பிழிந்து அதில் பீட்ரூட் துண்டுகளை பத்து நிமிடங்கள் போட்டு வைக்க வேண்டும். பிறகு அதனுடன் நம் விருப்பதிக்கேற்ப சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா சேர்த்துப் பருகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 1, 2018, 12:30 [IST]
Desktop Bottom Promotion