Latest Updates
-
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா?
ஏன் குண்டானவர்களுக்கு திரும்ப திரும்ப சாப்பிட வேண்டுமென தோன்றுகிறது?
பசி இருக்கிறதோ இல்லையோ, உடல் பருமனாக இருப்பவர்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கு வேகமாக ஜீரணமாகிறதா? அல்லது அதிக பசிதான்
காரணமா என்ற கோணத்தில் ஆய்வினை செய்யும்போது, மூளியிலுள்ள ஒரு தூண்டுதல்தான் இதற்கு காரணம் என்று டெக்ஸாசிலுள்ள சௌத்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து கூறியுள்ளது.

உடல் பருமன் பற்றிய ஆய்வை இந்த பல்கலைக் கழகம் மேற்கொண்டபோது மூளையிலுள்ள மிக முக்கிய பகுதிகளிலுள்ள நடுமூளையில் தூண்டப்படுவதுதான் காரணம்.
பொதுவாக சாப்பிட்டவுடன் மூளையில் கார்டெக்ஸ் பகுதியில் ஒரு மாற்றம் நடக்கும். இதனால் மூளை மேற்கொண்டு சாப்பிடாமல் நிறுத்திக் கொள்ளும். இதனால்தான்
வயிறு நிறைந்தவுடன் எவ்வளவுதான் ருசியாக இருந்தாலும், நமக்கு சாப்பிட தோன்றாது. உணவைக் கண்டத்தும் மூளையின் தூண்டுதல் மிகவும் குறைந்துவிடுகிறது.
ஆனால் இந்த மாற்றம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நடப்பதில்லை. இதனால் சாப்பிட்ட பின்பும், ஏதாவது கொறித்துக் கொண்டேயிருப்பார்கள்.இஅவர்களுக்கு
மூளையின் தூண்டுதல் அதிகரிக்கிறது. உணவு சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் உணவைக் கண்டதும் அவர்களுக்கு ஒரு வகையான ஈர்ப்பும் வருவதற்கு இதுதான் காரணம்
என்று சௌத்வெஸ்டர்ன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நான்ஸி கூறுகிறார்.
முகவும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிற 15 பெண்களும், ஒல்லியாக இருக்கும் 15 பெண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களின் மூளையை எம். ஆர்.
ஐ ஸ்கேன் மூலம் ஆராயப்பட்டது. இது மூளையை ஆராய உதவும் கருவி.
முதலில் 9 மணி நேரத்திற்கு எதுவும் தரப்படாமல் வெறும் வயிற்றில் வைத்திருக்கப்பட்டனர்.அப்போது அவர்களின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது,
பசியுடம் மூளை இருப்பது கொடிட்டது. சாப்பிட்டதும் அவர்களிடம் அவர்களுக்கு உண்டான திருப்தியை பற்றியும், பசியின் அளவைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.
பின்னர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது, பசியை ஏற்படுத்தும் தூண்டுதல் ஒல்லியான பெண்களுக்கு ண்டைபெறவில்லை. அதே சமயம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு
இந்த தூண்டுதல் நடைபெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

