Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
உங்க கால் & கிட்னி உட்பட 6 பாகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? இரத்தத்துல சர்க்கரை அதிகமா இருக்காம்!
சிறுநீரகங்கள் உடலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இது உடலில் இருந்து அனைத்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வடிகட்ட உதவுகிறது. இது உறுப்பு திறம்பட செயல்பட உதவும் சிறிய இரத்த நாளங்களைக் கொண்டுள்ளது.
இன்றைய நாளில் ஒவ்வொரு வீட்டிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒருவராவது இருப்பார்கள். இந்தியாவில் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் அதிகரித்தது வருகிறது. 35 வயதை கடந்தவுடன் சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற பயம் அனைவருக்குள்ளும் உள்ளது. அந்தளவிற்கு சர்க்கரை நோய் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இது தினசரி நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு சுகாதார நிலை. உயர் இரத்த சர்க்கரை அடிக்கடி தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும் உணர்வு, சோர்வு, மங்கலான பார்வை மற்றும் எதிர்பாராத எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

மேலும், கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவுகள் உடலில் உள்ள சிறிய இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், இது இரத்தம் உறுப்புகளை அடைவதை கடினமாக்குகிறது. இதுவே உயிருக்கு ஆபத்தாக முடியும். சர்க்கரை நோய் உங்களுக்கு மாரடைப்பு மற்றும் பாக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும். உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படக்கூடிய அறிகுறிகளை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். உயர் இரத்த சர்க்கரையைக் குறிக்கும் உங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் அறிகுறிகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கண்கள்
உயர் இரத்த சர்க்கரை அளவுகள் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களை பாதிக்கலாம். இது மங்கலான பார்வை, கண்புரை, கிளௌகோமா மற்றும் மிக முக்கியமான, நீரிழிவு ரெட்டினோபதி போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ரெட்டினோபதி என்பது விழித்திரையில் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கியது. இது கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒளி-உணர்திறன் அடுக்கு ஆகும். இந்த நிலைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

பாதம்
சர்க்கரை நோய் உங்கள் கால்களை அதிகமாக பாதிக்கலாம். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் தங்கள் கால் மற்றும் பாதங்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களை பாதிக்கும் இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது நரம்பு சேதம், இது உங்கள் பாதத்தில் எந்தவிதமான உணர்வையும் இழக்கச் செய்கிறது. இரண்டாவதாக, உங்கள் கால்களில் மோசமான இரத்த ஓட்டம் ஏற்படலாம். இது எந்த தொற்றுநோயையும் குணப்படுத்துவதை கடினமாக்குகிறது. காலப்போக்கில், புண்கள் அல்லது தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது துண்டிக்கப்படுவதற்கு கூட வழிவகுக்கும்.

சிறுநீரகங்கள்
சிறுநீரகங்கள் உடலின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இது உடலில் இருந்து அனைத்து நச்சுகள் மற்றும் கழிவுகளை வடிகட்ட உதவுகிறது. இது உறுப்பு திறம்பட செயல்பட உதவும் சிறிய இரத்த நாளங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், உயர் இரத்த சர்க்கரை இந்த இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம், இது நீரிழிவு சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும். இது நீரிழிவு நெஃப்ரோபதி என்றும் அழைக்கப்படுகிறது. சிறுநீரில் புரதம், சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை அதிகரித்தல், இரத்த அழுத்தக் கட்டுப்பாடு மோசமடைதல், பாதங்கள், கணுக்கால், கைகள் மற்றும் கண்களில் வீக்கம், குமட்டல், வாந்தி, சோர்வு ஆகிவை இதற்கான அறிகுறிகள்.

நரம்புகள்
நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் நெஃப்ரோபதியைப் போலவே, உயர் இரத்த சர்க்கரையும் நீரிழிவு நியூரோபதி எனப்படும் நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும். இந்த நிலை உணர்வின்மை அல்லது வலி அல்லது வெப்பநிலையை உணரும் திறன் குறைதல், கூச்ச உணர்வு அல்லது எரியும் உணர்வு, கூர்மையான வலிகள் மற்றும் பிடிப்புகள், தொடுதலுக்கான தீவிர உணர்திறன் மற்றும் கடுமையான கால் புண்கள், தொற்றுகள் மற்றும் பல போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

இதயம் மற்றும் இரத்த நாளங்கள்
உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்களுக்கு சேதம் விளைவிக்கும் என்பதால், ஒரு நீரிழிவு நோயாளி எப்போதும் பக்கவாதம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட இருதய சிக்கல்களின் அதிக ஆபத்தில் இருக்கிறார். கூடுதலாக, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, நீரிழிவு நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் உட்பட இதய நோய்க்கான ஆபத்தை உயர்த்தும் பிற நிலைமைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கிறது.

ஈறு நோய்
ஈறு நோய், பீரியண்டால்ட் நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது உயர் இரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய ஒரு பொதுவான நிலை. இது பொதுவாக ஈறுகளில் இரத்த ஓட்டத்தை குறைக்கும் இரத்த நாளங்கள் அடைப்பு அல்லது தடித்ததால் ஏற்படுகிறது. எனவே, இதனால் தசைகள் பலவீனமடைகின்றன. மேலும், உயர் இரத்த சர்க்கரை பொதுவாக ஈறு நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இரத்தப்போக்கு, உணர்திறன் மற்றும் ஈறுகளில் வலி ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பது எப்படி?
சர்க்கரை நோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இருப்பினும், உங்கள் ஆபத்தை குறைக்க பல வழிகள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதற்கான முதல் படியாகும். நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான, சத்தான மற்றும் குறைவான பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமற்ற பழக்கங்களை கட்டுப்படுத்துங்கள்
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது முதன்மையாக இருக்க வேண்டும். உடல் செயல்பாடு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் இதை அடைய முடியும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட ஆரோக்கியமற்ற பழக்கங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். மிக முக்கியமாக, மருத்துவரைச் சந்தித்து, அடிக்கடி உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











