Latest Updates
-
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா?
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
அதிகப்படியான இரத்த சர்க்கரை நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நீரிழிவு நரம்பியல் நோயின் விளைவாக நான்கு உணர்வுகள் உள்ளன. அவை, கூச்ச உணர்வு, உணர்வின்மை, எரிதல் மற்றும் வலி ஆகியவை.
சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நாளில் 30 வயதை கடந்த பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றம், உடல் பருமன் மற்றும் ஆரோக்கிமாற்ற உணவு பழக்கம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. நீரிழிவு என்பது உடலில் உள்ள கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறினால் அல்லது இன்சுலினை அதன் முழுத் திறனுக்குப் பயன்படுத்தாதபோது ஏற்படும் ஒரு நாள்பட்ட சுகாதார நிலையாகும். இது இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

மேலும், இந்த நோயைப் பற்றிய கவலை என்னவென்றால், இது நரம்புகள் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் அதே வேளையில், பலவிதமான அறிகுறிகளை ஏற்படுத்தும். இது நீரிழிவு நியூரோபதி என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உடலில் ஏற்படும் நீரிழிவு நோயைக் குறிக்கும் சில உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். அவை என்னென்ன உணர்வுகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

நீரிழிவு நரம்புகளை எவ்வாறு பாதிக்கிறது?
ஆய்வின் கூற்றுப்படி, நீரிழிவு நரம்பியல் என்பது உங்களுக்கு அதிக இரத்த சர்க்கரை இருந்தால் ஏற்படக்கூடிய ஒரு வகையான நரம்பு சேதத்தை குறிக்கும் சுகாதார நிலை. ஆரோக்கியமான உடலைப் பொறுத்தவரை, இந்த நிலைக்கான திட்டவட்டமான காரணம் தெரியவில்லை. இருப்பினும், உயர் இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படாத சிறிய இரத்த நாளங்களின் (தந்துகிகள்) சுவர்களை பாதிக்கிறது மற்றும் பலவீனப்படுத்துகிறது. அவை நரம்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இதனால் அவை சமிக்ஞைகளை அனுப்பும் திறனைத் தடுக்கின்றன.

உயர் இரத்த சர்க்கரையைக் குறிக்கும் உணர்வுகள்
அதிகப்படியான இரத்த சர்க்கரை நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நீரிழிவு நரம்பியல் நோயின் விளைவாக நான்கு உணர்வுகள் உள்ளன. அவை, கூச்ச உணர்வு, உணர்வின்மை, எரிதல் மற்றும் வலி
ஆகியவை. இந்த உணர்வுகள் உங்கள் உடலில் கால்விரல்கள் மற்றும் விரல்களின் நுனிகளில் எழலாம்.

பாதிக்கப்படக்கூடிய பிற உடல் பாகங்கள்
நரம்புகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தவிர, கட்டுப்பாடற்ற, சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு நோய் பாதங்கள், கண்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்கள், ஈறுகள் மற்றும் சிறுநீரகங்களையும் பாதிக்கலாம். நீரிழிவு உங்கள் இதயம் மற்றும் முழு உடல் சுழற்சியையும் பாதிக்கிறது என்பதால், இது உங்கள் சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் உள்ள சிறிய இரத்த நாளங்களை பாதிக்கிறது. மேலும் உங்கள் இதயம் மற்றும் மூளைக்கு உணவளிக்கும் இரத்த நாளங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகள்
ஆய்வின் கூற்றுப்படி, நீரிழிவு நோயின் சில பொதுவான அறிகுறிகள் வழக்கத்தை விட அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சி செய்யாமல் எடை குறைதல், சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது போன்றவை. போதுமான இன்சுலின் கிடைக்காதபோது ஏற்படும் தசை மற்றும் கொழுப்பின் முறிவின் துணைப்பொருளாக கீட்டோன்கள் உள்ளன. இதனால் நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வீர்கள், எரிச்சல் அல்லது மற்ற மனநிலை மாற்றங்கள், மங்கலான பார்வை, மெதுவாக குணமாகும் புண்கள், ஈறு, தோல் மற்றும் பிறப்புறுப்பு தொற்று போன்ற பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?
சர்க்கரை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும், சில ஆபத்து காரணிகள் உங்களை வேறு நோய்களுக்கும் ஆளாக்குகின்றன. நாள்பட்ட நிலை அல்லது சுற்றுச்சூழல் காரணிகளின் குடும்ப வரலாறு இதில் அடங்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பதே நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழி. சத்தான, ஆரோக்கியமான தாவர உணவுகளை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது உயர் இரத்த சர்க்கரையை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications