Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
கொரோனா லாக்டவுன் காலத்தில் இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதில் தாமதமானால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்தை உண்டாக்கிவிடும். ஆகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் பராமரிக்க ஒருசில உணவுகளை எப்போதும் வைத்திருப்பது நல்லது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் லாக்டவுனில் உள்ளது. இதுவரை 21 நாட்கள் தான் ஊரடங்கு இருந்தது. ஆனால் தற்போது இந்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், ஊரடங்கால் எங்கு நற்பதமான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் நிச்சயம் மனதில் எழலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்ச்சியாக கிடைக்கிறது.

சர்க்கரை நோய் பராமரிப்பில் டயட் முக்கிய பங்கை வகிக்கிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். ஆனால் லாக்டவுன் காலத்தில், வெளியே எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் சோம்பேறித்தனம் அதிகரித்து, சமைத்து சாப்பிட சற்று தாமதமாகலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதில் தாமதமானால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்தை உண்டாக்கிவிடும். ஆகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் பராமரிக்க ஒருசில உணவுகளை எப்போதும் வைத்திருப்பது நல்லது. இப்போது அந்த உணவுப் பொருட்கள் எவையென்று காண்போம்.

ஓட்ஸ்
ஒரு பௌல் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்வதால் உணவுக்கு பிறகு க்ளுக்கோஸ் மற்றும் இன்சுலின் ரெஸ்பான்ஸ் குறையும். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, க்ளைசீமிக் கட்டுப்பாட்டை பராமரிக்கவும் உதவும்.

தர்பூசணி, முலாம் பழம்
அதிர்ஷ்டவசமாக, தர்பூசணி, முலாம் பழம் போன்றவை இப்போது கிடைக்கின்றன. இந்த பழங்களை நீங்கள் கடைக்கு செல்லும் போது கண்டால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய பழங்களாகும்.

முட்டை
முட்டை ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவும். முட்டையின் மூலம் ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து உடலுக்கு கிடைக்கும். ஒரு சிறப்பான விஷயம் என்னவெனில், இது நீண்ட நாட்கள் சேகரித்து வைத்திருக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்றவை உள்ளது. இந்த மூன்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களாகும். ஆகவே பருப்பு வகைகளான பீன்ஸ், பட்டாணி, சுண்டல், கொண்டைக்கடலை போன்றவற்றை வாங்கி வைத்து, அன்றாடம் உட்கொள்ளுங்கள்.

பூண்டு
பூண்டை பச்சையாகவோ, சமையலில் சேர்த்தோ அல்லது சாலட்டிலோ சேர்த்து உட்கொள்ளலாம். பூண்டில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் உட்பொருட்கள் அடங்கியுள்ளன. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் சமையலறையில் கட்டாயம் இருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் கூட.



Click it and Unblock the Notifications