Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
சனி, ஞாயிறு படுக்கையே கதின்னு இருப்பவரா நீங்க? ரொம்ப நல்லது இதப்படிங்க!!!
இது முக்கியமாக ஐ.டி-யில் வேலை செய்யும் நபர்கள் படிக்கச் வேண்டியது. ஆம், அவர்கள் தான் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் உறக்கத்தை தொலைத்து, வார இறுதியில் இரண்டு நாட்கள் கும்பகர்ணன் போல, "போதும்-டா சாமி.." என கும்பிடு போட்டு உறங்குபவர்கள்.
இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???
சமீபக் காலமாக ஆரோக்கியமான நபர்களுக்கு கூட நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஸ்லிம்மாக தான் இருப்பார், டயட் மேற்கொள்வார்கள் ஆனால் நீரிழவு நோய் பாதிப்பு இருக்கும். பொதுவாகவே, டயட்டும், உடல் எடை அதிகமாக இருப்பது தான் நீரிழிவு ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஓயாமல் வேலை செய்யும் ஐ.டி.வாசியா நீங்க...?
ஆனால், இந்த திடீர் உடல்நல மாற்றம் ஏற்படுவது ஏன்? வார இறுதியில் அதிகமாக உறங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்று தெரிந்துக் கொள்ளுங்கள்....

வார இறுதியில் நல்ல தூக்கம்
ஸ்லிம்மாக இருப்பார்கள், உடல்திறனும் நன்கு தான் இருக்கும், டயட் எல்லாம் சரியாக பின்பற்றுவார்கள். ஆனாலும், அவர்களுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும், இதற்கு காரணம் வார இறுதியில் அதிகமாக உறங்குவது தான் என கூறுகிறார்கள்.

சிகாகோ பல்கலைக்கழகம்
அதிக நேரம் வேலை செய்யும் பழக்கம் உடையவர்கள், திடீரென அதிக நேரம் உறங்குவதை பற்றி சிகாகோ பல்கலைகழகத்தினர் ஓர் ஆய்வை நடத்தினர்.

நேரம் மாறுதல்
தொடர்ச்சியாக ஒரே மாதிரி வேலை செய்து வருபவர்கள். திடீரென இரண்டு, மூன்று நாட்கள் நன்கு தூங்குவது உடல்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு
சாதாரணமாக நீங்கள் இரவு உறங்கும் நேரத்தில் இருந்து ஓரிரு நாட்கள் மட்டும் நான்கைந்து மணிநேர மாற்றம் எற்பதுவது, நீரிழிவு சதவீதத்தை 16% வரை உயர்த்துகிறதாம்.

வளர்ச்சிதை மாற்றங்கள்
இரண்டு நாட்கள் நன்கு உறங்கிவிட்டு, மற்றநாள் தூக்கத்தை தொலைப்பது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை சீர்குலைக்கிறது என ஆய்வாளர் ஜோஷியேன் (Josiane Broussard ) கூறியுள்ளார். அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் உறக்கமே இன்றி இருந்துவிட்டு, வார இறுதியில் இரண்டு நாட்கள் அதிகமாக உறங்கும் நபர்களுக்கு இந்த தாக்கம் ஏற்படுகிறது.

அதிர்ச்சி
இது குறித்து ஆய்வாளர் எஸ்ரா (Esra Tasali),"வேலை நாட்களில் குறைவாக உறங்கும் நபர்கள், வார இறுதியிலும் அதையே கடைப்பிடியுங்கள், இல்லையேல் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பினும் கூட நீரிழிவு அபாயம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது" என கூறியுள்ளார்.

மற்ற பிரச்சனைகள்
நாள்பட போதிய தூக்கமின்மை காரணத்தால் நீரிழிவு மட்டுமின்றி உயர் இரத்த அழுத்தமும் வர வாய்ப்புகள் இருக்கிறதாம். அறிவாற்றல் சார்ந்த பிரச்சனைகளும் வரலாம் என்று கூறப்படுகிறது.

அக்கறை அவசியம்
எனவே, உறக்கத்தை சாதாரணமாக கருத வேண்டாம். வேலை நாட்கள் மற்றும் வார இறுதி என 24x7-ம் சரியான அளவு உறங்கி, எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications