Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உங்களுக்கு சர்க்கரைவியாதி உள்ளது என சுட்டிக்காட்டும் நீங்கள் அறிந்திராத 5 அறிகுறிகள்!!
சர்க்கரைவியாதி பற்றி பொதுவான அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் அறிந்திராத இந்த சில அறிகுறிகள் சர்க்கரை வியாதியின் ஆரம்ப நிலையாகும். விழிப்புணர்வுடன் இருக்க இந்த கட்டுரையை படியுங்கள்
பொதுவாக ஆண்கள் 40 வயதுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை வியாதி, இதய நோய்கள் மன அழுத்தம் என பல நோய்கள் தாக்குகின்றன.
இதற்கு 30 களிலேயே நீங்கள் ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நடுத்தர வயதையும் இளமையான காலம் போல் கழிக்கலாம்.

இதற்கு உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிக அவசியம். உடற்பயிற்சியே செய்ய வேண்டுமென்பதில்லை. உங்க வீட்டு வேலைகளை செய்யலாம்.
அன்றாட வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதினால் இரண்டு முக்கிய நன்மைகள் ஏற்படும். உங்கள் உடல் தசைகளுக்கு தேவையான பயிற்சிகளை பெறுவீர்கள். இன்னொன்று உங்கள் மனைவியின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

சர்க்கரை வியாதி :
இன்று அதிக அளவில் இந்தியாவில் ஆண்களை தாக்கும் நோய்களில் சர்க்கரை வியாதி முதலிடம் என்று இங்கே பல கட்டுரைகளில் பார்த்தாயிற்று.
அதன் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெர்ந்து வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் நீங்கள் அறிந்திராத அதே சமயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அறிகுறிகளும் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

கண் பார்வை அதிகரிக்கிறதா?
நீங்கள் கண்ணாடி போடுபவராக இருந்தால்,கண்ணாடி போடாமலேயே கண் பார்வை திடீரென அதிகரிக்கிறதா? மகிழ்ச்சி கொள்ளாதீர்கள்.
சர்க்கரை வியாதியினால் கண் பார்வை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல் நன்றாக தெரிந்த கண் இப்போது மங்கலாக தெரிகிறதா? இதுவும் சர்க்கரைவியாதின் அறிகுறியாக இருக்கலாம்.
கண் பார்வை வழக்கத்திற்கு மாறாக கூடினாலோ குறைந்தாலோ, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

உடலில் அரிப்பு ஏற்படுகிறதா?
ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது அது ரத்த ஓட்டத்தை பாதிக்கின்றது. இதனால் சருமத்தில் மிகுந்த வறட்சி உண்டாகி அரிப்பை தருகிறது.
குறிப்பாக கை, கால், பாதம் ஆகிய இடங்களில் வறட்சியினால் அரிப்பு உண்டானால் எதற்கும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

காது ஒழுங்காக கேட்கிறதா?
உங்களால டிவியில் எப்போதும் கேட்கப்படும் ஒலியில் கேட்கமுடியவில்லையா? யாராவது பேசினால் திரும்பவும் சொல்லுங்கள் என கேட்டு காதை தீட்டுகிறீர்களா? இது சர்க்கரைவியாதியின் மிக ஆரம்ப நிலையாகும். உடனடியாக பரிசோதனை செய்து பாருங்கள்.

கழுத்து பகுதிகளில் தோல் மாறுகிறதா?
திடீரென கழுத்தின் மடிப்பு, முழங்கை, ஆகிய பகுதிகளில் குஷன் போல் மெத்தென்று சதை தடிமனாகிறதா அல்லது சரும நிறம் மாறுகிறதா? மிக அதிக குளுகோஸ் அளவு ரத்தத்தில் அதிகரித்ததன் விளைவு இது. இதுவும் ஆரம்ப நிலையாகும்

தூக்க வியாதி மற்றும் குறட்டை சத்தம் :
பகலில் குறட்டை சப்தத்துடன் தூங்குகிறீர்களென்றால் உங்கள் சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது என்று பாஸ்டனில் உள்ள ஜோஸ்லின் டயாபடிஸ் சென்டரின் தலைமை மருத்துவர் ஒஸ்மா கூறுகிறார்.
இரவுகளில் தூக்கமின்மையும் அல்லது அரைகுறை தூக்கமும், பகலில் தூங்கி வழிவதும் தொடர்ந்து ஏற்பட்டால், ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரித்து குளுகோஸ் அளவை அதிகரிக்கச் செய்கின்றது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.



Click it and Unblock the Notifications